சிப்பாய்க் கிளர்ச்சி, 1857
1857, இந்திய விடுதலைப் போராட்டம் / From Wikipedia, the free encyclopedia
இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது[2]. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர்[3]. ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது[2]. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது.
சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இந்திய விடுதலைப் போராட்டம் பகுதி | |||||||||
1857 இல் இடம்பெற்ற பெரும் கலகத்தைக் காட்டும் 1912 வரைபடம். கலகம் இடம்பெற்ற நகரங்கள்: மீரட், டெல்லி, கான்பூர், லக்னௌ, ஜான்சி, குவாலியர். |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள், 7 இந்திய சிற்றரசுகள், தனியாட்சிப் பகுதிகளான ஆவாட் மற்றும் ஜான்சி ஆகியவற்றின் வெளியேற்றப்பட்ட அரசர்கள் சில பொது மக்கள். | பிரித்தானிய இராணுவம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் Native Irregulars and British regulars, பிரித்தானிய தன்னார்வலர் படைகள் 20 சிற்றரசுகள் (நேபாளம், காஷ்மீர் உட்பட. |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
இரண்டாம் பகதூர் ஷா நானா சாகிப் மிர்சா முகல் பாக்த் கான் இராணி இலட்சுமிபாய் தாந்தியா தோபே பேகம் ஹஸ்ரத் மகால், அகமதுல்லா சா | இந்தியத் தளபதி: ஜோர்ஜ் ஆன்சன் (மே 1857 வரை) சர் பாட்ரிக் கிராண்ட் சர் கொலின் காம்பல் (ஆகஸ்ட் 1857 முதல்) ஜங் பகதூர் ராணா [1] |