சென்னை வான்காணகம்
From Wikipedia, the free encyclopedia
சென்னை வானியல் ஆய்வகம் (Madras Observatory) 1786 ஆம் ஆண்டு வில்லியம் பெட்ரி என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு தனியார் வானியல் ஆய்வகம் ஆகும். மெட்ராசு வானியல் ஆய்வகம் என்ற பெயரில் இது தொடங்கப்பட்டது. சென்னை பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் 1792 ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வகத்தை நிருவகிக்கத் தொடங்கியது. வரைபடத்திற்காக அட்சரேகைகளைப் பதிவுசெய்யவும், நேரத் தரங்களைப் பராமரித்து வழிகாட்டுதலும் இந்த ஆய்வகத்தை நிறுவுவதற்கான முக்கிய நோக்கம் ஆகும். பிற்காலத்தில் இந்த ஆய்வகம் நட்சத்திரங்கள் மற்றும் புவி காந்தவியல் பற்றிய அவதானிப்புகளையும் செய்தது. சுமார் 1792 முதல் 1931 வரை இயங்கியபோது நட்சத்திரங்களின் விரிவான பட்டியலை தயாரிப்பது ஆய்வகத்தின் பிரதானமான பணியாக இருந்தது.