ஜெரால்ட் டெம்பிளர்
மலாயாவின் உயர் ஆணையர் / From Wikipedia, the free encyclopedia
சர் ஜெரால்ட் டெம்பிளர் (Sir Gerald Templer, 11 செப்டம்பர் 1898 – 25 அக்டோபர் 1979) என்பவர் இரண்டு உலகப் போர்களில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு மூத்த பிரித்தானிய இராணுவ அதிகாரி; மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்; 1952 - 1954-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் பொதுவுடைமை கிளர்ச்சிகளை முறியடித்ததில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார்.
மலாயாவில் சர் ஜெரால்ட் டெம்பிளர், 1953 | |
பட்டப்பெயர்(கள்) | மலாயாவின் புலி[1] |
பிறப்பு | (1898-09-11)11 செப்டம்பர் 1898 கோல்செஸ்டர், எசெக்ஸ், இங்கிலாந்து |
இறப்பு | 25 அக்டோபர் 1979(1979-10-25) (அகவை 81) செல்சி, இலண்டன், இங்கிலாந்து |
அடக்கம் | சாலிஸ்பரி, இங்கிலாந்து[2] |
சார்பு | ஐக்கிய இராச்சியம் |
சேவை/ | பிரித்தானிய இராணுவம் |
சேவைக்காலம் | 1916–1958 |
தரம் | படைத்துறை உயர்தர தளபதி |
போர்கள்/யுத்தங்கள் |
1951-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, பிரேசர் மலைக்கு அருகே உள்ள கோலா குபு பாரு சாலை, 90.4-ஆவது கி.மீட்டரில், மலாயா பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த பொதுவுடைமை கிளர்ச்சியாளர்களால், என்றி கர்னி எனும் உயர் ஆணையர் கொல்லப்பட்டார். அவருக்குப் பதிலாக 1952-இல் டெம்பிளர், மலாயாவிற்கான உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மலாயாவில் பொதுவுடைமை ஆதரவாளர்களை எதிர்த்துப் போராட பிரிக்ஸ் திட்டம் எனும் ஒரு மறுமலர்ச்சி திட்டத்தைத் தீவிரப்படுத்தியவரும் இவரே ஆகும்.[3]
மலேசிய அரசாங்கம் இவரின் அரிய சேவைகளை நினைவுகூரும் வகையில்,1960 ஆகத்து 1-ஆம் தேதி, மலேசியாவின் மிக உயரிய விருதான துன் விருதை வழங்கிச் சிறப்பு செய்தது.[4]
மேலும் கோலாலம்பூர், சுங்கை பீசியில் உள்ள உள்ள அரச மலேசிய இராணுவக் கல்லூரியில் உள்ள முதன்மை மண்டபத்திற்கு 'துன் டெம்பிளர் மண்டபம்' என்று அவரின் நினைவாகப் பெயரிட்டுள்ளது.[5] அத்துடன் அவரை மேலும் கௌரவிக்கும் வகையில், சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம், ரவாங்கில் 1,214 எக்டர் பரப்பளவு கொண்ட தாவரவியல் பூங்காவிற்கு டெம்பிளர் பூங்கா என்றும் பெயரிட்டுள்ளது.[6][7]