வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல்
From Wikipedia, the free encyclopedia
வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல் அல்லது வட்டச்சாலை மறைசுடுவீரர் தாக்குதல் என்பது 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பால்டிமோர் - வாசிங்டன், டி. சி. பெரு நகர வட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு நிகழ்வாகும். இந்த துப்பாக்கி சூட்டில் பத்து பேர் இறந்தனர் மூவர் கடுமையாக காயமுற்றனர்.
வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல் | |
---|---|
Locations of the fifteen sniper attacks in the D.C. area numbered chronologically. | |
இடம் | மேரிலாந்து, வர்சீனியா, வாசிங்டன், டி. சி. அரிசோனா |
நாள் | பிப்ரவரி 16, 2002 – செப்டம்பர் 26, 2002 (ஆரம்ப கால சுடுதல்கள்) அக்டோபர் 2, 2002 – அக்டோபர் 24, 2002 (மறைசுடுவீரர் தாக்குதல்) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | வாசிங்டன்-பால்டிமோர் பெருநகர வட்ட பொதுமக்கள் |
தாக்குதல் வகை | இலக்கற்ற கொலை, கொலைகள் |
ஆயுதம் | Bushmaster XM-15 rifle, .223 Remington/5.56×45mm NATO (preliminary shootings) |
இறப்பு(கள்) | மொத்தம் 17:
|
காயமடைந்தோர் | மொத்தம் 10 :
|
தாக்கியோர் | ஆலன் முகமது, லீ மால்வோ |
நாற்பத்தோரு வயதான யான் ஆலன் முகமதுவும் பதினேழு வயதான லீ பாய்ட் மால்வோவும் தங்கள் 1990 செவரோலே கப்ரீசு மகிழுந்தில் பயணப்பட்டுக்கொண்டே இத்துப்பாக்கி சூட்டை நடத்தினார்கள். கொலை கொள்ளை ஆகிய குற்றச்செயல்களை பத்து மாநிலங்களில் 2002 பிப்ரவரி முதல் நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டார்கள் ஏழு பேர் காயமுற்றனர். அக்டோபரையும் சேர்த்தால் மொத்தம் பதினேழு கொலை.[1]
2003இல் முகமதுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவர் குற்றவாளியான மால்வோவுக்கு பிணையில் வரமுடியாத ஆறு தொடர்ச்சியான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2009இல் முகமதுக்கு விச ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அலபாமா மாநிலத்திற்கும் மில்லருக்கும் இடையே உச்ச நீதிமன்றத்தில் நடந்த சட்டப்போராட்டத்தின் முடிவாக வந்த தீர்ப்பின் படி சிறார் குற்றவாளிகளை பிணையில் வராத படி ஆயுள் தண்டனை வழங்க முடியாது என்பது அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தை மீறுவது என்றதன் அடிப்படையில் 2017இலில் வர்சீனியா மேல் முறையீட்டு நீதி மன்றம் மால்வோவின் பிணையில்லா மூன்று ஆயுள் தண்டனையை நீக்கியது. இத்தீர்ப்பு மேரிலாந்தில் வழங்கப் பட்ட ஆறு பிணையில் வராத படி ஆயுள் தண்டனைக்கு பொருந்தாது. பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டு ஆயள் தண்டனை பெற்றிருந்தால் இருபது ஆண்டுகளுக்கு பின் விடுதலை பெறுவார்கள் என்ற வர்சீனியா சட்டத்தின் அடிப்படையில் பிப்ரவரி 2020 அன்று வர்சீனியா நீதிமன்றம் வழங்கிய தண்டனை முடிவுக்கு வரும்.