விற்கலை
கலை, விளையாட்டு வகை / From Wikipedia, the free encyclopedia
வில்லின் நாணில் அம்பை ஏற்றி எய்வது அம்பெய்தல் என்னும் விற்கலை அல்லது வில்வித்தை (archery) ஆகும். தொடக்க காலத்தில் அம்பை எய்து விலங்குகளை மக்கள் வேட்டையாடினர். போரிலும் வில்லம்பு முக்கிய கருவியாக விளங்கியது. வில்லைத் தனுசு என்னும் வடசொல்லால் வழங்குவர். தற்காலத்தில் அம்பெய்தல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கிவருகிறது.