அகமது போசுதமாம்
From Wikipedia, the free encyclopedia
அகமது போசுதமாம் அல்லது அப்துல்லா சானி ராஜா கெச்சில் (ஆங்கிலம்; மலாய்: Ahmad Boestamam; சீனம்: 阿末·博斯达曼); (பிறப்பு: 30 நவம்பர் 1920; இறப்பு: 19 சனவரி 1983) என்பவர் மலேசிய சுதந்திரப் போராட்ட வீரர்; பிரித்தானிய மலாயாவில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அரசியல் புரட்சியாளர் என அறியப்படுகிறார்.
விரைவான உண்மைகள் மாண்புமிகுஅகமது போசுதமாம் Yang Berhormat Tuan Ahmad Boestamam, தலைவர், மலாயா தேசிய கட்சி ...
அகமது போசுதமாம் Yang Berhormat Tuan Ahmad Boestamam | |
---|---|
அகமது போசுதமாம் மலேசிய விடுதலை போராட்டாளர் | |
தலைவர், மலாயா தேசிய கட்சி | |
பதவியில் 1955–1959 | |
மலேசிய நாடாளுமன்றம் for மலேசிய மக்கள் கட்சி | |
பதவியில் 1959–1964 | |
செதாபாக் மக்களவை தொகுதி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அப்துல்லா சானி ராஜா கெச்சில் Abdullah Sani Raja Kechil (1920-11-30)30 நவம்பர் 1920 பேராக் பேராங் உலு, பேராக் மலாயா |
இறப்பு | 19 சனவரி 1983(1983-01-19) (அகவை 62) கோலாலம்பூர் பொது மருத்துவமனை கோலாலம்பூர், மலேசியா |
அரசியல் கட்சி | மலாயா தேசிய கட்சி மலேசிய மக்கள் கட்சி மலேசிய மருகேன் கட்சி |
துணைவர் | டத்தின் ரபிதா முகமது வாஜிப் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | கோலாலம்பூர், மலேசியா |
வேலை | அரசியல்வாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் |
மூடு
மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அகமது போசுதமாம்; மலேசிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட அரசியல் போராட்டவாதி ஆவார். மலாயா தேசிய கட்சி, மலேசிய மக்கள் கட்சி, மலேசிய மருகேன் கட்சி ஆகிய கட்சிகளைத் தோற்றுவித்த தலைவரும் ஆவார்.[1]