இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய இராச்சியம் இயற்றிய 1773, ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் இந்தியத்துணைக் கண்டத்தில் செயல்படும் கிழக்கிந்திய கம்பெனியின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் இந்தியத் தலைமை ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது. முதலில் இந்தியத் தலைமை ஆளுநரின் அலுவலகம் கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் இயங்கியது.
1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பின்னர், 1858 முதல் இந்தியத் தலைமை ஆளுநர் பதவியின் பெயர் இந்திய வைஸ்ராய் என மாற்றப்பட்டது. இந்தியாவில் கம்பெனி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் ஆணைப்படி, இந்திய வைஸ்ராய் நியமிக்கப்பட்டார். வைஸ்ராயின் தலமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்த் தில்லிக்கு மாற்றப்பட்டது.
கானிங் பிரபு முதல் இந்திய வைஸ்ராய் ஆக 1858ல் தில்லியில் பதவி ஏற்றுக் கொண்டார்.