இன்கா பேரரசு
From Wikipedia, the free encyclopedia
இன்கா பேரரசு (Inca Empire) என்பது கொலம்பிய காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காவின் ஒரு பேரரசாகும்[3]. கொலம்பசின் வருகைக்கு முந்தைய காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய பேரரசாக இது விளங்கியது.[4] இப்பேரரசின் தலைநகரம் குசுக்கோ ஆகும். 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவின் உயர் பிரதேசத்தில் இப்பேரரசு அமைக்கப்பட்டது. 1438 முதல் 1533 வரையான காலப்பகுதியில் தென்னமெரிக்காவின் மேற்குப் பகுதிகள், ஆண்டீஇய மலைத்தொடரை மையப்படுத்திய பகுதிகள், தற்போதைய எக்குவாடோர், பெரு ஆகியவற்றின் பெரும் பகுதிகள் பொலீவியாவின் மேற்கு மற்றும் தென்மத்திய பகுதிகள், ஆர்ஜெண்டீனாவின் வடமேற்குப் பகுதி,சிலியின் வடக்கு மற்றும் வடமத்தியப் பகுதிகள் கொலம்பியாவின் தெற்குப் பகுதி போன்ற பெரு நிலப்பரப்பை இன்காக்கள் அமைதி வழியிலும், பலாத்காரமாகவும் கைப்பற்றி இன்கா பேரரசுடன் இணைத்திருந்தனர். இன்காக்கள் தமது அரசரை "சூரியனின் மகன்" என அழைத்தனர்.
இன்கா பேரரசு Inca Empire தவான்டீன்சுயூ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1438–1533 | |||||||||
நிலை | பேரரசு | ||||||||
தலைநகரம் | குசுக்கோ (1438-1533) வில்கபம்பா (1539-1572) | ||||||||
பேசப்படும் மொழிகள் | கெச்சுவா (அதிகாரபூர்வம்), ஐமாரா, பூக்கினா, ஜாக்கி, மூச்சிக் | ||||||||
சமயம் | இன்கா சமயம் | ||||||||
அரசாங்கம் | மன்னரட்சி | ||||||||
இன்கா பேரரசர் | |||||||||
• 1438-1471 | Pachacutec | ||||||||
• 1471-1493 | Tupac Yupanqui | ||||||||
• 1493-1525 | Huayna Capac | ||||||||
• 1525-1532 | Huascar | ||||||||
• 1532-1533 | Atahualpa | ||||||||
வரலாற்று சகாப்தம் | P-Columbian | ||||||||
• இன்கா பேரரசு பச்சாகூட்டெக் என்பவனால் அமைக்கப்படல் | 1438 | ||||||||
• உள்நாட்டுப் போர் | 1527-1532 | ||||||||
• எசுப்பானியாவின் ஆக்கிரமிப்பு | 1533 | ||||||||
பரப்பு | |||||||||
1438[1] | 800,000 km2 (310,000 sq mi) | ||||||||
1527 | 2,000,000 km2 (770,000 sq mi) | ||||||||
மக்கள் தொகை | |||||||||
• 1438[2] | 12000000 | ||||||||
• 1527 | 20000000 | ||||||||
|
உள்ளூர் மொழிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வட்டார வழக்குகள் பேசப்பட்டன என்றாலும் இந்த பேரரசின் அதிகாரப்பூர்வ மொழி கெச்வா ஆகும். இன்காக்கள் தங்கள் பேரரசை டவாண்டின்சுயு என குறிப்பிட்டனர். இதற்கு "நான்கு ஐக்கிய மாகாணங்கள்" அல்லது "நான்கு மண்டலங்கள்" என்று பொருள்.