இரஞ்சித் சிங்
From Wikipedia, the free encyclopedia
இரஞ்சித் சிங் (Ranjit Singh; பஞ்சாபி: ਮਹਾਰਾਜਾ ਰਣਜੀਤ ਸਿੰਘ) என்பவர் 1780 முதல் 1839 வரையிலான காலத்தில்[1] சீக்கிய பேரரசின் மன்னாராக ஆட்சிசெய்து புகழ் பெற்றவர் ஆவார். 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியத் துணைக்கண்டத்தில் வட மேற்குப் பகுதியை இவர் ஆட்சி செய்தார். அவர் சிசுப்பருவத்தில் இருந்தபோதே பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு தப்பிப்பிழைத்தார், ஆனால் அவரது இடது கண்ணின் பார்வையை இழந்தார். தனது 10 வயதில் இவர் தனது தந்தையாருடன் சேர்ந்து முதலாவது போரில் சண்டையிட்டார். இவரது தந்தை இறந்தபின் ஆப்கானியர்களை வெளியேற்றுவதற்காக தனது இளம் பருவத்தில் பல போர்களில் ஈடுபட்டார். 21 வயதிலேயே பஞ்சாப் சிங்கம் எனவும் பஞ்சாபின் மகாராசா என்றும் இவர் அழைக்கப்பட்டார்.[2] அவரது தந்தை இறந்தபின் ஆப்கானியர்களை வெளியேற்றுவதற்காக அவர் தனது இளம் பருவத்தில் பல போர்களில் ஈடுபட்டார். 1839 ஆம் ஆண்டில் இவருடைய தலைமையின் கீழ் பஞ்சாப் பகுதியில் இவருடைய பேரரசு வளர்ச்சியடைந்தது.[3]
இரஞ்சித் சிங் ਮਹਾਰਾਜਾ ਰਣਜੀਤ ਸਿੰਘ | |
---|---|
மகாராசா ரஞ்சித் சிங் | |
பிறப்பு | 13 நவம்பர் 1780 குஜ்ரன்வாலா |
இறப்பு | 27 சூன் 1839 (அகவை 58) |
பணி | Sovereign |
வாழ்க்கைத் துணை/கள் | Mahtab Kaur |
ரஞ்சித் சிங்கின் எழுச்சிக்கு முன்னர் பஞ்சாபில் ஏராளமான போர்க்குணமிக்க குழுக்கள் இருந்தன, அவற்றில் பன்னிரெண்டு குழுக்கள் சீக்கிய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் ஓர் இசுலாமியக் குழுவும் இருந்தன.[2] சீக்கியப் பேரரசை உருவாக்குவதற்காக ரஞ்சித் சிங் இச்சீக்கியக் குழுக்களையும் மற்ற உள்ளூர் அரசுகளையும் கைப்பற்றி வெற்றிகரமாக ஒருங்கிணைத்தார்.
இசுலாமியப் படைகளின் படையெடுப்புகளை குறிப்பாக ஆப்கானிலிருந்து வந்த இசுலாமியப் படைகளை பலமுறை தோற்கடித்தார். பிரிட்டனுடன் நட்பான உறவுகளை மேம்படுத்திக் கொண்டார்.[4] ரஞ்சித் சிங்கின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள், நவீனமயமாக்கல், உள்கட்டமைப்பில் முதலீடு மற்றும் பேரரசின் செழிப்புக்குத் தேவையான பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரஞ்சித் சிங்கின் கல்சா இராணுவமும் அரசாங்கமும் சீக்கியர்கள், இந்துக்கள், இசுலாமியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் உள்ளிட்டவர்களால் உருவாக்கப்பட்டிருந்தது.[5] சீக்கிய கலாச்சாரம் மற்றும் கலை மறுமலர்ச்சிக்கான காலப்பகுதி முதலானவை இவரது பரம்பரைச் சொத்தாக கருதப்படுகின்றன. சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமான அமிர்தசரசிலுள்ள அரிமந்திர் சாகிப் எனப்படும் பொற்கோயில், இவரது ஆதரவில் உருவான பட்னா நகரிலுள்ள தாகிட் சிறீ பட்னா குருத்துவாரா, பீகார் மற்றும் மகாராட்டிர மாநில நாந்தேடு நகர அசூர் குருத்துவாரா உள்ளிட்ட முக்கிய குருத்துவாராக்களும் இவரது காலத்தில் உருவானவையாகும்.[6]
ரஞ்சித் சிங்கிற்குப் பின்னர் அவரது மகன் மகாராசா கராக் சிங் 1839 ஆம் ஆண்டு அரியணையைப் பிடித்து ஆட்சி செய்தார்.[7]