இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2022
கோட்டபய ராஜபக்ச பதவி விலகியதையடுத்து எஞ்சிய பதவிக் காலத்துக்கு அதிபரை தெரிவு செய்வதற்கு இரக / From Wikipedia, the free encyclopedia
2022 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் 2022 சூலை 20 அன்று நடைபெற்றது. முன்னாள் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச சூலை 14 அன்று பதவி விலகியதை அடுத்து அவரது பதவிக்காலம் முடியும் வரை 9-ஆவது அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத் உறுப்பினர்களிடையே இரகசிய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.[1][2] இத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் சூலை 19 அன்று நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டனர்.[3][4]
விரைவான உண்மைகள் வாக்களித்தோர், வேட்பாளர் ...
| |||||||||||||||||||||
வாக்களித்தோர் | 99.11% | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||
|
மூடு
2022 சூலை 20 இல் நடந்த இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று நிறைவேற்றதிகாரம் கொண்ட 8-ஆவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]