இலங்கை நாடு
From Wikipedia, the free encyclopedia
இலங்கை நாடு (Lanka kingdom) /ˈləŋkɑː/ வங்காள விரிகுடாவில், கடலால் சூழப்பட்ட தீவு நாடாகும். இராமாயணக் காவியத்தின் படி, பண்டைய இலங்கைத் தீவின் திரிகூடமலையில் பெரும் கோட்டைக்களைக் கட்டிக் கொண்டு, இராவணன் தன் தம்பியர்களான கும்பகர்ணன், வீடணன் மற்றும் தன் மூத்த மகன் இந்திரஜித் ஆகியவர்களுடன் இலங்கையை ஆண்டான். சீதையை கடத்திச் சென்ற இராவணனின் கோட்டைகளை அனுமன் எரித்தான். இராமன், இலங்கைக்கு சேது பாலம் அமைத்து, இராவணன் முதலியவர்களை வென்று சீதையை மீட்டு, வீடணனுக்கு இலங்கையின் மன்னராக பட்டம் கட்டினார்.[1][2][3]
- இது பழங்கால நாட்டைப் பற்றியது. தற்கால நாட்டைப் பற்றி அறிய இலங்கை என்ற கட்டுரையை நோக்குக.