உதய்பூர் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
உதய்பூர் இராச்சியம் அலலது மேவார் இராச்சியம் (Udaipur State or Mewar Kingdom), தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த மேவார் பிரதேசத்தை கி பி 730 முதல் சித்தோர்கார் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது. பின்னர் உதய்பூர் நகரத்தை புதிய தலைநகராகக் கொண்டு இயங்கியது. உதய்பூர் இராச்சிய மன்னர்கள் தங்களின் முதல் தலைநகரமான நக்டாவில் சகஸ்ரபாகு கோயில்கள் கட்டினர்.
விரைவான உண்மைகள்
உதய்பூர் அரசு மேவார் இராச்சியம் உதய்பூர் இராச்சியம்उदयपुर रियासत | ||||||
சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
பிரித்தானிய இந்தியாவில் உதய்பூர் இராச்சியத்தின் வரைபடம் | ||||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 730 | ||||
• | இந்திய விடுதலை | 1949 | ||||
பரப்பு | ||||||
• | 1941 | 33,517 km2 (12,941 sq mi) | ||||
Population | ||||||
• | 1941 | 65,00,000 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 193.9 /km2 (502.3 /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | இராஜஸ்தான், இந்தியா | |||||
"Udaipur State (also called Mewar): History". The Imperial Gazetteer of India. 1909. pp. v. 24, p. 87. |
மூடு
உதய்பூர் இராச்சியம் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானிய இந்திய அரசின் கீழ் இயங்கிய சமஸ்தானம் ஆகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் 6 ஏப்ரல் 1949-இல் மேவார் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. [1]
மேவார் இராச்சியத்தை இராசபுத்திர குல கலோத் மற்றும் சிசோதிய வம்சத்தினர் கிபி 730 முதல் 1949 முடிய 1,400 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர்.