எடுவார்ட் மனே
From Wikipedia, the free encyclopedia
எடுவார்ட் மனே (Édouard Manet, ஜனவரி 23,1832 - ஏப்ரல் 30, 1883) பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியர். 19ஆம் நூற்றாண்டில் நவீன வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்களை வரைந்த ஓவியர்களில் இவரும் ஒருவர். மேற்கத்திய ஓவியப் பாணி யதார்த்தவாதம்/இயல்பித்திலிருந்து உணர்வுப்பதிவுவாதம் பாணிக்கு மாறக் காரணமானவர். இவர் தொடக்க காலத்தில் வரைந்த சிறந்த ஓவியங்கள் “தி லஞ்சியன் ஆன் தி கிராஸ் (Le déjeuner sur l'herbe) மற்றும் ஒலிம்பியா (Olympia) ஆகும். இவரது ஓவியங்கள் பெரும் சர்ச்சைக்குரியனவாக அப்போது இருந்தாலும், இளம் ஓவியர்கள் இவரது “இம்பரஷனிஸம்“ போல வரையத் தொடங்கினர். இன்றைக்கு இது வாட்ஷெட் ஓவியங்கள் எனப்படுகின்றன. இதுவே, “மாடர்ன் ஆர்ட்“ எனப்படும் நவீன ஓவியத்திற்கு வித்திட்டது.
விரைவான உண்மைகள் எடுவார்ட் மனே, பிறப்பு ...
எடுவார்ட் மனே | |
---|---|
எடுவார்ட் மனே (வரைந்தவர்: நாடர், 1874) | |
பிறப்பு | எடுவார்ட் மனே |
தேசியம் | பிரஞெசுக் காரர் |
அறியப்படுவது | ஓவியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Le déjeuner sur l'herbe, 1863 Olympia, 1863 |
அரசியல் இயக்கம் | உணர்வுப்பதிவுவாதம், யதார்த்தவாதம் |
மூடு