எல். வி. பிரசாத்
தமிழ்த் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
எல். வி. பிரசாத் (L. V. Prasad) என்று பிரபலமாக அறியப்பட்ட லக்ஷ்மி வரப்பிரசாத ராவ் (17 ஜனவரி 1908 - 22 ஜூன் 1994) ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். மேலும், 1980இல், இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதாசாஹேப் பால்கே விருது பெற்றவர். ஆந்திரத் திரைப்படத்துறையில் அவரது பங்களிப்பிற்காக ரகுபதி வெங்கையா விருது வழங்கப்பட்டது. இவர் பிரசாத் குழுமத்தின் நிறுவனராவார். இதில் பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் பிரசாத் ஸ்டுடியோஸ், பிரசாத்ஸ் ஐமேக்ஸ் மற்றும் எல்.வி. பிரசாத் கண் நிறுவனம் ஆகியவை இதில் அடங்கும்.[1] 1980 ல் புது தில்லியில் நடைபெற்ற 27 வது தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவின் தலைவராக எல்.வி. பிரசாத் இருந்தார்.
எல். வி. பிரசாத் | |
---|---|
2006இல் இந்திய அஞ்சல் அட்டை முத்திரையில் பிரசாத் | |
பிறப்பு | அக்கினேனி லட்சுமி வர பிரசாத் ராவ் (1908-01-17)17 சனவரி 1908 சோமாவாரபாடு, ஏலூரு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 22 சூன் 1994(1994-06-22) (அகவை 86) |
பணி | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், தொழிலதிபர் |
செயற்பாட்டுக் காலம் | 1930–1990 |
பிள்ளைகள் | 2, ரமேஷ் பிரசாத் |
உறவினர்கள் | ஏ. ஸ்ரீகர் பிரசாத் (மருமகன்) |