எஸ். ஏ. கணபதி
From Wikipedia, the free encyclopedia
எஸ். ஏ. கணபதி (S.A. Ganapathy) அல்லது மலாயா கணபதி (பிறப்பு:1912 - இறப்பு:மே 4, 1949) என்பவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர்.
விரைவான உண்மைகள் எஸ். ஏ. கணபதி S.A.Ganapathy 胜作为, பிறப்பு ...
எஸ். ஏ. கணபதி S.A.Ganapathy 胜作为 | |
---|---|
மலாயா தொழிலாளர்களின் உரிமைப் போராட்டவாதி | |
பிறப்பு | 1912 இந்தியா தமிழ்நாடு தம்பிக்கோட்டை, தஞ்சாவூர், |
இறப்பு | மே 4, 1949(1949-05-04) (அகவை 37) மலேசியா கோலாலம்பூர் புடு சிறைச்சாலை பிரித்தானியர்களால் தூக்குத் தண்டனை |
இருப்பிடம் | சிங்கப்பூர் |
தேசியம் | மலேசியர் |
மற்ற பெயர்கள் | கயிற்றில் தொங்கிய கணபதி (கலைஞர் கருணாநிதி வழங்கிய பெயர்)[1] |
பணி | தேசிய தொழிற்சங்கவாதி |
அறியப்படுவது | மலாயா தொழிற்சங்கவாதி அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவர் சமூக நீதி செயல்பாட்டாளர் இந்திய தேசிய இராணுவ வீரர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | ஆறுமுகதேவர்; வைரம்மாள் |
வாழ்க்கைத் துணை | திருமணம் ஆகவில்லை |
மூடு
அன்றைய மலாயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து தூக்கிலிடப்பட்டவர். மலாயா கண்டெடுத்த புரட்சித் தலைவர்களில் ஒருவர்.[2][3]