ஏரில்
From Wikipedia, the free encyclopedia
பொய்க்கனி (Aril) அல்லது போலிப் பொய்க்கனி (Arillode) விதையைப் பகுதியளவு அல்லது முழுமையாக மூடியிருக்கும் சிறப்பான வெளிவளரி ஆகும். போலிப் பொய்க்கனிகள் சில சமயங்களில் வேறுபட்டவை. இருப்பினும் பொய்க்கனி சூற்பையில் விதை (சூற்காம்பு அல்லது விதைமுளை) ஒட்டியுள்ள இடத்தில் வளருகிறது, போலிப் பொய்க்கனி விதை உறையின் மற்ற பகுதிகளிலிருந்து வளருகிறது.[2]. சில சமயங்களில் "பொய்க்கனி" என்ற சொல் பூக்கும் தாவரங்களில் உள்ள விதைகளில் காணப்படும் சதைப்பற்றுள்ள வளரிகளையும் குறிக்க பயன்படுகிறது, சாதிக்காய் விதையும் இதைப் போன்றது.[3]. பொய்க்கனியும் போலிப் பொய்க்கனியும் பெரும்பாலும் உண்ணக்கூடிய பொருளாக விளங்குவதால், விலங்குகள் மூலம் விதைப்பரவுதல் நடைபெறவும் ஏதுவாக உள்ளது.[4]. போலிப்பொய்க்கனிகளும் பொய்க்கனி போன்ற உருவமே பெற்றுள்ளன, இவை பொதுவாக ஃபர்சிரேசி இனத்தாவரங்களின் பைரின்களில் காணப்படுவதோடு சூற்பையின் இடையடுக்கிலிருந்து வளரக்கூடியது.[5] - இந்த சதைப்பற்றுள்ள, உண்ணக்கூடிய பெரிகார்ஃப் ஆனது இரண்டு பகுதிகளாக பிளவுற்று, பின் தொலைவாக விழுகிறது அல்லது கறுப்பு நிற விதைகளைச் சுற்றிலும் ஒரு வெளிர் நிறமுள்ள சாப்பிடும் பொய்க்கனி வெளிப்படுகிறது.
விதைசூழ் சதை அல்லதுபொய்க்கனி பழம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இந்த பொய்க்கனி பெரும்பாலும் பூக்கும் தாவர இனங்களில் காணப்படுகிறது. லாங்கன், லிட்சி மற்றும் அக்கீன் வகை பழங்களில் விதையை சுற்றி உள்ள மேலுறை அடுக்கிற்குப் பதிலாக சதைப்பற்றுள்ள உண்ணக்கூடியப் பகுதியாக நன்கு வளர்ச்சியடைந்த பொய்க்கனிப் பகுதி உள்ளது. இத்தகைய பொய்க்கனிகள் சில வித்திலைத் தாவரச் சிற்றினங்களில் காணப்படுகிறது. குறிப்பாக, ஈயூவ் போன்ற இல்லிகியூவ், காகிகட்டே கூம்பு வகைத் தாவரங்களில் காணப்படுகிறது. பெரும்பான்மையான வித்திலைத் தாவர மரங்களில் கூம்புவகையாகவும், ஈயூவின் இனப்பெருக்க அமைப்பில் ஒற்றை விதையை மூடிய குடுவை போன்ற சதைப்பற்றுடைய அமைப்பாகவும் உள்ளது. இத்தகைய மூடிய அமைப்பு நன்கு வளர்ச்சியடைந்த கூம்பு செதில்களால் ஆனது.