ஒளிரும் உயிரினங்கள்
உயிரினங்கள் / From Wikipedia, the free encyclopedia
ஒளிரும் உயிரினங்கள் (Bioluminescent organisms) என்பது உயிரொளிர்வு ஆற்றலைப் பெற்றுள்ள உயிரினங்களைக் குறிக்கும். உயிரினங்களில் மட்டுமல்லாது, சில உயிரில்லாப் பொருள்களிலிலிருந்தும் வெளிச்சம் உண்டாவதைக் கண்டறிந்துள்ளனர். அவற்றின் அக ஒளியால், அவை ஒளிர்வுடன் திகழுகின்றன. இவ்வாறு உயிரிகளும், உயிரற்ற பொருள்களும், தமக்குத் தாமே உண்டாக்கிய வெளிச்சத்தால், பிரகாசிப்பதை ஒளிர்தல் என்கிறோம். உயிர்ப் பொருள்களின் ஒளிர்தலில், சிறிது வேறுபாடுகள் நிகழ்தலால், அதை உயிர் ஒளிர்தல் என்று அழைக்கிறோம். யப்பான் நாட்டு போர் வீரர்கள், தங்களது வரைபடத்தினை இருளில் காண, இத்தகைய உயிரினத்தைப் பயன்படுத்தினர். 2008 ஆம் ஆண்டு இத்தகைய ஒரு உயிரினத்தினை விரிவாக ஆராய்ந்த ஒசமு சைமோமுரவுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது.[1][2] அவர் கடல் வாழ் உயிரனங்களில் ஒன்றான ஜெல்லி மீன் இனத்தினை ஆராய்ந்ததால், அதற்குரிய புரதத்தினைக் கண்டறிந்தார். இப்புரதமானது (green fluorescent protein = GFP), குழந்தை மருத்துவத்தில் பெரிதும் பயனாகிறது.[3] ஒவ்வொரு வகை உயிரினப் புரதமும், வெவ்வேறு நிறங்களை உமிழும் இயல்பைப் பெற்று இருக்கின்றன.[4] உயிர்வளி இல்லாத சூழ்நிலையிலும், இப்புரதங்கள் ஒளிரும் இயல்பைப் பெறுவது, இப்புரதங்களின் சிறப்பாகும்.