காதற்கடிதம்
எழுத்து வடிவில் அன்பின் வெளிப்பாடு / From Wikipedia, the free encyclopedia
காதற்கடிதம் (Love letter) என்பது காதல் உணர்வுகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்தி எழுதும் கடிதம் ஆகும். ஒருவர் தான் காதலிப்பவரிடம் இதனை நேரடியாகக் கொடுப்பார். அல்லது அஞ்சல் வழியாகவோ புறா மூலமாகவோ நண்பர் மூலமாகவோ அனுப்புவார்.[1] சில வேளைகளில் காதற்கடிதத்தை மறைவான ஓரிடத்தில் ஒளித்து வைத்து விடுவதுமுண்டு.[2] முதன்முறையாகக் காதலைத் தெரிவிப்பதற்காக மட்டுமன்றி, மனைவிக்கோ காதலிக்கோ கூடக் காதற்கடிதத்தை எழுதுவதுண்டு.[3] காதற்கடிதம் எழுதும் வழக்கம் தற்போது குறைந்து வருவதாகக் கூறப்படுகின்றது.[4][5]