கான் திரைப்பட விழா
From Wikipedia, the free encyclopedia
கான் திரைப்பட விழா (Cannes Festival, பிரெஞ்சு மொழி: Festival de Cannes), என்பது பிரான்சு, கான் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு பன்னாட்டுத் திரைப்பட விழாவாகும். 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகின் மிகப் பழையதும், உலக அளவில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு நிகழ்வும் ஆகும். இவ்விழாவில் உலகளாவிய ரீதியில், ஆவணத் திரைப்படங்கள் உட்பட அனைத்து வகைத் திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.[1][2][3] அழைப்பிதழ் பெற்றோர் மட்டுமே பங்குகொள்ளும் இவ்விழா ஆண்டுதோறும் மே மாதமளவில் நடைபெறுகின்றது.
கான் திரைப்பட விழா Cannes Film Festival | |
---|---|
இடம் | கான்), பிரான்சு |
மொழி | பன்னாட்டு |
[www |
2015 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழா 2015 மே 13-24 காலப்பகுதியில் நடைபெற்றது. அமெரிக்கத் திரைப்பட இயக்குனர்கள் கோயென் சகோதரர்கள் நடுவர் குழுவின் கூட்டுத் தலைவர்களாகச் செயல்பட்டார்கள். பிரெஞ்சு இயக்குனர் சாக் ஆடியார் இயக்கி ஈழத்தமிழ் எழுத்தாளரும், போராளியுமான சோபா சக்தி நடித்த தீபன் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப் பனை) விருது வென்றது.[4][5][6][7][8]