கோமாரி நோய்
From Wikipedia, the free encyclopedia
கோமாரி நோய் (Foot-and-mouth disease) ஒரு தொற்று நோயாகும். பிகொர்ணா எனும் நச்சுயிரியால் இந்த நோய் ஏற்படுகின்றது. இந்த நோயை கரணை நோய், குளம்பு வாய் நோய் என்றும் கூறுகிறார்கள். இந்த நோய் பிளவு பட்ட குளம்பு உள்ள அனைத்து விலங்குகளையும் தாக்குகின்றது. ஆடுகளை விட, மாடுகள் மற்றும் பன்றிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அசை போடும் வன விலங்குகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. ஒட்டகம், குதிரை, ஆய்வுக்கூட விலங்குகள் மற்றும் மனிதர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.