சகதாயி கானரசு
நடு ஆசியாவில் 1226–1347இல் இருந்த துருக்கிய மயமாக்கப்பட்ட ஒரு மங்கோலியக் கானரசு / From Wikipedia, the free encyclopedia
சகதாயி கானரசு என்பது ஒரு மங்கோலியக் கானரசாகும். இது பிற்காலத்தில் துருக்கியமயமாக்கப்பட்டது.[6][7][8] செங்கிஸ் கானின் இரண்டாவது மகனான சகதாயி கான், அவரது வழித்தோன்றல்கள் மற்றும் பின் வந்தவர்கள் ஆகியோரால் ஆளப்பட்ட நிலப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஆரம்பத்தில் இது யுவான் அரசமரபின் பெயரளவிலேயே இருந்த தலைமை நிலையை ஏற்றுக் கொண்டது.[9] எனினும் குப்லாய் கானின் ஆட்சியின் போது சகதாயி கானான கியாசுத்தீன் பரக் பேரரசரின் ஆணைகளை ஏற்பதை நிறுத்திவிட்டார். 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதன் அதிகபட்ச பரப்பளவின்போது இந்தக் கானரசானது ஏரல் கடலின் தெற்குப் பகுதியில் ஆமூ தாரியா முதல் நவீன கால மங்கோலிய-சீன எல்லையில் உள்ள அல்தாயி மலைகள் வரை பரவியிருந்தது.[10]
சகதாயி கானரசு | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||
1375ஆம் ஆண்டு கட்டலான் வரைபடத்தில் உள்ள சகதாயி கானரசின் கொடி | |||||||||||||||
நிலை | |||||||||||||||
தலைநகரம் |
| ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||||||
சமயம் | |||||||||||||||
அரசாங்கம் |
| ||||||||||||||
கான் | |||||||||||||||
• 1225–1242 | சகதாயி கான் | ||||||||||||||
சட்டமன்றம் | குறுல்த்தாய் | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய நடுக்காலங்கள் | ||||||||||||||
1225 | |||||||||||||||
• சகதாயியின் இறப்பு | 1242 | ||||||||||||||
1340கள் | |||||||||||||||
• மேற்குப் பேரரசு வீழ்ந்தது | 1370 | ||||||||||||||
• கிழக்குப் பேரரசு வீழ்ந்தது | 1680கள் | ||||||||||||||
பரப்பு | |||||||||||||||
1310 அல்லது 1350ஆம் ஆண்டு மதிப்பீடு[4][5] | 3,500,000 km2 (1,400,000 sq mi) | ||||||||||||||
நாணயம் | நாணயங்கள் (திர்காம்கள், கெபெக் மற்றும் புல்) | ||||||||||||||
|
14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சகதாயி கான்கள் திரான்சாக்சியானாவின் கட்டுப்பாட்டைத் தைமூரியப் பேரரசிடம் இழந்தனர். எஞ்சிய பகுதியானது மொகுலிசுதான் என்று அழைக்கப்பட்டது. இது 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நீடித்தது. பிறகு எர்கந்து மற்றும் துர்பன் கானரசுகளாகப் பிரிந்தது. 1680ஆம் ஆண்டு எஞ்சிய சகதாயி கானரசின் பகுதிகள் தங்களது சுதந்திரத்தைச் சுங்கர் கானரசிடம் இழந்தன. 1705ஆம் ஆண்டு கடைசி சகதாயி கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவ்வாறாக சகதாயி அரசமரபானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.