சகதாயி கான்
செங்கிஸ் கானின் இரண்டாவது மகன், சகத்தாய் கானரசின் கான் / From Wikipedia, the free encyclopedia
சகதாயி கான் (மொங்கோலியம்: Цагадай; நடு மொங்கோலியம்: ᠴᠠᠭᠠᠲᠠᠶ சகடய்; உய்குர்: چاغاتايخان, சகடய்-கான்; சீன மொழி: 察合台, சகேடை; துருக்கியம்: சகடய்; பாரசீக மொழி: جغتای, ஜோகடை; 22 திசம்பர் 1183 – 1 சூலை 1242) செங்கிஸ் கானின் இரண்டாவது மகன் ஆவார். இவர் கி.பி. 1226லிருந்து-கி.பி. 1242 வரை சகதாயி கானரசின் கானாகப் பதவி வகித்தார்.[1] சகதாயி மொழி மற்றும் சகதாயி மக்கள் இவருக்குப்பின் பெயரிடப்பட்டனர். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஐந்து மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவற்றைப் பெற்றார்.[1] செங்கிஸ் கான் உருவாக்கிய சட்டமான யசாவின் செயலாக்கத்தை மேற்பார்வை செய்ய இவர் செங்கிஸ் கானால் நியமிக்கப்பட்டார், இருப்பினும் அது செங்கிஸ் கான் மங்கோலியப் பேரரசின் முடிசூட்டப்பட்ட கானாக இருந்தவரை மட்டுமே நீடித்தது.[1] இவரது பேரரசானது மங்கோலியப் பேரரசில் இருந்து பிரிக்கப்பட்டு சகதாயி கானரசாகப் பெயர் பெற்றது. சூச்சியை பெரிய கானாக ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் இவர் ஒரு மூர்க்கனாகவும் மற்றும் சற்றே நிதானமானவராக உறவினர்களாலும் கருதப்பட்டார்.[1] இவரது உறவினர்களில் இந்த பிரச்சினையைப் பற்றி இவர் மிகவும் கடினமாகக் குரல் கொடுத்தார். சகதாயி ஒரு எளிய மற்றும் ஆற்றல் மிக்க ஆளுநராக தோன்றுகிறார், ஒருவேளை கடினமானவராகவும், அருவருப்பானவராகவும் இருந்திருக்கலாம். கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிருந்தார்.[1] எவ்வாறாயினும், சகதாயி தனது தந்தையின் போர்வீரன் போன்ற சுறுசுறுப்புடன் இருந்தார். ஒரு ராச்சியமாக பலவகைப்பட்ட மக்கள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டுவதில் எப்போதும் வெற்றி கண்டார்.[1]
சகதாயி கான் | |
---|---|
சகதாயி கான் சிலை, மங்கோலியா | |
ஆட்சிக்காலம் | 1226 – 1241-42 |
முன்னையவர் | செங்கிஸ் கான் |
பின்னையவர் | கரா குலாகு |
பிறப்பு | 22 திசம்பர் 1183 |
இறப்பு | 1 சூலை 1242(1242-07-01) (அகவை 58) அல்மலிக் |
மனைவி | எசுலுன் கதுன் தோகன் கதுன் செவின்சு கதுன் |
குழந்தைகளின் பெயர்கள் | முத்துகன் பைதர் எசு மோங்கே |
குலமரபு | போர்சிசின் |
தந்தை | செங்கிஸ் கான் |
தாய் | போர்ட்டே உஜின் கதுன் |
மதம் | தெங்கிரி மதம் |