சரவணபெலகுளா
From Wikipedia, the free encyclopedia
சரவணபெலகுளா என்னும் கன்னடச் சொல்லின் தமிழ் வடிவம் 'சரவண வெள்ளைக்குளம்'.[1][2] சரவணபெலகுளா என்னும் ஊர் பெங்களூரிலிருந்து 144 கிலோமீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில், சென்னராயப்பட்டினம் என்ற நகருக்கு அருகில் உள்ளது. கி.பி. 978-993 ஆண்டினதாகக் கொள்ளப்படும் கோமதேசுவர பாகுபலி எனும் சமண முனியான கோமதீஸ்வர் சிலை 57 அடி உயரம் கொண்டதாக இங்கு உள்ளது.
இங்குள்ளகோமதீஸ்வரர் பாகுபலி சிலை சைன மதத்தின் மிக முக்கியமான தீர்த்தங்களில் ஒன்றாகும் (புனித யாத்திரை மேற்கொள்ளும் இடம்). இது தலக்காட்டின் மேலைக் கங்கர்களின் வம்சத்தின் ஆதரவின் கீழ் கட்டடக்கலை மற்றும் சிற்ப வேலைகள் உச்சத்தை அடைந்தது. மேலைக் கங்க மன்னரின் அமைச்சரான சந்திரராயன் என்பவரால் பத்தாம் நூற்றாண்டில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது. சந்திரகுப்த மௌரியர் கி.மு. 298 இல் சமண துறவியாகி, சந்நியாசி வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்ட பின்னர் இங்கு இறந்ததாக கூறப்படுகிறது.[3]