சீக்கிய அலைந்துழல்வு
From Wikipedia, the free encyclopedia
சீக்கிய அலைந்துழல்வு (Sikh diaspora) வழமையான பஞ்சாப் பகுதியிலிருந்து தற்கால பஞ்சாபி சீக்கியரின் புலம் பெயர்ந்து வாழ்தலைக் குறிக்கும். இவர்களது சமயம் சீக்கியம் ஆகும். பல நூற்றாண்டுகளாக பஞ்சாப் பகுதி சீக்கியத்தின் தாயகமாக விளங்குகின்றது. சீக்கிய அலைந்துழல்வு பெரும்பாலும் பஞ்சாபி அலைந்துழல்வின் உட்கணமாகும்.[2]
1849இல் சீக்கியப் பேரரசு வீழ்ச்சியடைந்து பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு கைப்பற்றிய பிறகே சீக்கியர்கள் புலம் பெயரத் தொடங்கியதாக பெரிதும் கருதப்படுகின்றது. சீக்கிய அலைந்துழல்வின் புகழ்பெற்ற நபராக சீக்கியப் பேரரசின் கடைசி மகாராசா துலீப் சிங் உள்ளார்; பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இவரை வாழ்நாள் முழுமைக்கும் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார். துலீப் சிங்கின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து பஞ்சாபிலிருந்து சீக்கியர்களின் புலம் பெயர்வு வீதம் கூடியது. இருப்பினும் கடந்த 150 ஆண்டுகளில் அவர்கள் புலம் பெயர்ந்த இடங்கள் மாறி வந்துள்ளது. சீக்கிய புலம்பெயர்வு சீக்கியர்களுக்கு அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தைத் தந்துள்ளது.