சூரத்துல் ஃபீல்
From Wikipedia, the free encyclopedia
சூரத்துல் ஃபீல் (அரபு மொழி: سورة الفيل; மொ. 'யானை'), திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் ஆகும். திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும். திருக்குர்ஆனின் 105 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் ஃபீல் (யானை) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |