செயற்கை இழை
From Wikipedia, the free encyclopedia
செயற்கை இழைகள் (synthetic fibers, synthetic fibres) என்பவை விலங்குகள், தாவரங்களிலிருந்து பெறப்படும் மூலப் பொருட்களைக் கொண்டு அறிவியல் ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட இழைகள் ஆகும். பட்டுப் பூச்சிகள், சிலந்திகள், புழுக்கள் போன்றவைகளிடம் இருந்து கிடைக்கக் கூடிய இயற்கையான இழைபுரிகளை தண்ணீர், காற்று போன்றவைகளை பயன்படுத்தி பிரித்தெடுத்து நூலாக சுற்றி அதனைக் கொண்டு செயற்கையான முறையில் இவ்வகை செயற்கை இழைகள் உருவாக்கப்படும். முன்னர் பெட்ரோ வேதிப் பொருட்களிலிருந்து கிடைக்கப்படும் பாலிமர்களிலிருந்தே செயற்கை இழைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. சில செயற்கை இழைகளை தாவரங்களின் உட்பொருட்களைக் கொண்டும் தயாரிக்கின்றனர்.