தசாஸ்வமேத படித்துறை
From Wikipedia, the free encyclopedia
தச அஸ்வமேத படித்துறை (ஆங்கிலம்: Dashashwamedha ghat) (இந்தி: दशाश्वमेध घाट) வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றில் அமைந்துள்ள 85 படித்துறைகளில் முதன்மையானதாகும். இப்படித்துறை, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு[1] மிக அருகில் அமைந்துள்ளது. இந்து புராணக் கதைகளின்படி, இப்படித்துறையில் பிரம்மா அஷ்வமேத யாகம் செய்யும் போது பத்து குதிரைகளை (அஷ்வம்) பலியிட்டார் என்றும் மற்றொரு புராணக்கதையின்படி பிரம்மா இங்கு படித்துறை அமைத்து சிவபெருமானை எழுந்தருளச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.[2].[3]