தவாங் மடாலயம்
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பௌத்த மடாலயம் / From Wikipedia, the free encyclopedia
தவாங் மடாலயம் (Tawang Monastery) என்பது இந்திய ஒன்றியத்தின், அருணாச்சலப் பிரதேசத்தின், தவாங் மாவட்டத்தின், தவாங் நகரில் உள்ள ஒரு பௌத்த மடாலயமாகும். இந்த பௌத்தமடாலயமானது இந்தியாவிலேயே மிகப் பெரியது. உலகின் மிகப்பெரிய பௌத்தமடாலயமான திபெத்தின் லாசாவில் பொட்டலா அரண்மனை மடாலயத்துக்கு அடுத்து இரண்டாவது பெரிய மடாலயம் ஆகும். இது தவாங் ஆற்றின் பள்ளத்தாக்கில், இதே பெயரிலான சிறிய நகருக்கு அருகில், அருணாச்சலப் பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியில், திபெத்திய மற்றும் பூட்டான் எல்லைகளுக்கு அருகாமையில் உள்ளது.
தவாங் மடாலயம் Tawang Monastery | |
---|---|
தவாங் மடாலயம். | |
Monastery information | |
இடம் | இந்தியா, அருணாச்சல பிரதேசம், தவாங் |
நிறுவியது | மேரா லாமா லோட்ரே கப்டோ |
புதுப்பித்தல் | 2002 இல் 14வது தலாய்லாமா |
வகை | திபத்திய பௌத்தம் |
பிரிவு | Gelug |
பள்ளிகள் | 17 gompas |
No. of monks | 450 |
Architecture | 65 குடியிருப்பு கட்டடங்கள் |
தவாங் மடாலயமானது திபெத்தியில் கோல்டன் நாம்கே லாட்ஸே என அழைக்கப்படுகிறது.[சான்று தேவை], இது "விண்ணுலகின் சொர்க்கம்" என மொழிபெயர்க்கப்படுகிறது. இதை 5வது தலாய் லாமாவின் விருப்பத்திற்கு இணங்க. மெரிக் லாமா 1680-1681இல்[சான்று தேவை] நிறுவினார். இது மகாயான பௌத்த மதத்தின் கெலுக் பாடசாலைக்கு சொந்தமானது, மேலும் பிரித்தானிய ஆட்சிக் காலத்திலும் லாசாவின் டிரெபங் மடாலயத்தில் சமய உறவு தொடர்ந்து இருந்துவந்தது.
மடாலயம் மூன்றடு உயரப் பிரிவுகளாக உள்ளது. இது 925 அடி (282 மீ) நீள மதிற்சுவரால் சூழப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் 65 குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. மடாலய நூலகத்தில் பழங்காலத்திய மதிப்புமிக்க சமய நூல்கள் உள்ளன.