தாயத்து
From Wikipedia, the free encyclopedia
தாயத்து[1], (talisman) தங்கம், வெள்ளி அல்லது செப்புத் தகட்டால் ஆன நீள் உருண்டை வடிவத்தில் அமைந்திருக்கும் மந்திரத் தாயத்து ஆகும். இதனை தீய சக்திகளிடமிந்து தங்களை காத்துக் கொள்வதற்காக இடுப்பில் அல்லது கழுத்தில் அணிவர்.
கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் பொதுவாக உடலில் கட்டும் காப்பு எனப்படும் தாயத்துக்களை எல்லாமே தாலி என்பது வழக்கம்.[2]
சங்கத் தமிழ் இலக்கியங்களிலும், அதர்வண வேதத்திலும், இந்துக்கள் தாயத்துக்களைப் பயன்படுத்திய செய்திகள் கூறப்ப்பட்டுள்ளது.
தற்காலத்தில் அனைத்து சமயத்தவரும் தங்களின் வேத மந்திரங்களால் செபிக்கப்பட்ட தாயத்துக்களைக் கருப்புக் கயிற்றால் கைகளிலும், கழுத்திலும் அணிந்துகொள்கின்றனர். குழந்தைகளின் அரைஞாண் கயிறுகளில் கட்டப்படும் தாயத்தில், தொப்புள்கொடியின் ஒரு சிறு துண்டு வைக்கப்படுகிறது.