நிசாரிகளுக்கு எதிரான மங்கோலியர்களின் போர்ப்பயணம்
From Wikipedia, the free encyclopedia
அசாசின்கள் என்று அழைக்கப்பட்ட அலமுத் கால நிசாரிகளுக்கு எதிரான மங்கோலியர்களின் போர் பயணம் 1253 ஆம் ஆண்டு தொடங்கியது. ஈரானின் குவாரசமியப் பேரரசை மங்கோலியப் பேரரசு வென்ற பிறகு மற்றும் ஒரு தொடர்ச்சியான நிசாரி-மங்கோலிய சண்டைகளுக்கு பிறகு இது தொடங்கியது. இந்த போர் பயணமானது மோங்கே கானால் ஆணையிடப்பட்டது. ஹுலாகு கானால் நடத்தப்பட்டது.