நிறமாலைமானி
From Wikipedia, the free encyclopedia
நிறமாலை மானி (spectrometer) என்பது நிறமாலையின் இயற்பியல் பண்புகளைக் கண்டறிய உதவும் அறிவியல் கருவியாகும். கட்புலனாகும் கதிர்களில் வெள்ளை ஒளியை, அதிலுள்ள நிறங்களை, அதாவது நிறமாலையை பிரித்து அதன் பண்புகளை அறிய நிறமாலைமானி உதவுகிறது. நிறை நிறமாலை மானியில், ஒரு வாயுவிலுள்ள அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் ஆகியவற்றை நிறை வாாியாகப் பிரிக்கும் நிறமாலை உண்டாக்கப்படுகிறது. ஆனால் முதலில் நிறமாலை மானிகள் ஒளியை அதன் நிறங்களாகப் பிரிக்கவே பயன்படுத்தப்பட்டது. இயற்பியல், வானியல் மற்றும் வேதியியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளவே நிறமாலைமானிகள் பயன்படுத்தப்பட்டன. நிறமாலையியல் மூலம் பகுப்பாய்வு வேதியியலில் வேதிப் பொருட்களைப் பிரித்தறிய இன்றளவும் முதன்மையாகப் பயன்படுகிறது. வானியல் நிறமாலையியலில் வானியில்சார் பொருட்களிலுள்ள வேதிப் பொருட்களைப் பிரித்திறிய பயன்படுத்தப்படுகிறது. நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் ஆகியவற்றில் காணப்படும் தனிமங்களைக் கண்டறிய பயன்படுகிறது. பெரு வெடிப்புக் கோட்பாடு மற்றும் அண்டத்தின் தோற்றம் ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் நுண்ணலை நிறமாலைகள் மூலம் பெறப்படுகின்றன.
பொருளின் நிறை, உந்தம் மற்றும் ஆற்றல் ஆகிய பண்புகளில் எதாவது ஒன்றைப் பயன்படுத்தி அணுக்கள், மூலக்கூறுகள், அணுத் துகள்கள் ஆகியவற்றைப் பிரிக்கவும் நிறமாலை மானிகள் பயன்படுகின்றன. துகள் இயற்பியல் மற்றும் வேதிப் பொருள் பகுப்பாய்விலும் நிறமாலை மானிகள் மிகவும் பயன்படுகின்றன.