நோபல் பரிசு பெற்ற ஆசியர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
நோபல் பரிசு என்பது இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளின் சாதனைகளுக்காக 1901ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்படும் சர்வதேச பரிசாகும். பொருளாதாரத்தில் தொடர்புடைய பரிசு 1969 முதல் வழங்கப்படுகிறது.[1] இதுவரை சுமார் 800க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.[2]
இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு விருது பிரிவுகளிலும் ஆசியாவினைச் சார்ந்தவர்கள் பெற்றுள்ளனர். இரவீந்திரநாத் தாகூர் முதன் முதலாக நோபல் பரிசு பெறும் ஆசியக் கண்டத்தினைச் சாந்தவர் ஆவார். இவருக்கு 1913 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒரே ஆண்டில் அதிக அளவில் ஆசியர்களுக்கு 2014இல் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் ஐந்து ஆசியர்கள் நோபல் பரிசு பெற்றனர். அண்மையில் பரிசு பெற்ற ஆசியர்கள், இசுப்பானிய ஆராய்ச்சியாளர் அக்கிரா யோசினோ மற்றும் இந்தியப் பொருளாதார நிபுணர் அபிஜித் பேனர்ஜி. இவர்கள் 2019ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றனர்.
இன்று வரை (2020), ஐம்பத்தேழு ஆசியர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் இருபத்தெட்டு பேர் ஜப்பானியர்கள், பன்னிரண்டு பேர் இஸ்ரேலியர்கள், ஒன்பது இந்தியர்கள் (இந்தியாவில் பிறந்த இந்தியரல்லாத பரிசு பெற்றவர்கள் உட்பட) மற்றும் எட்டு சீனர்கள் (சீனரல்லாதவர்கள் உட்பட) சீனாவில் பிறந்த பரிசு பெற்றவர்கள்).