பண்டா சிங் பகதூர்
From Wikipedia, the free encyclopedia
Banda Singh Bahadur बन्दा सिंह बहादुर
பந்தாசிங் பகதூர் ਬੰਦਾ ਸਿੰਘ ਬਹਾਦਰ | |
---|---|
சப்பாஅரி சிரியில் உள்ள பந்தாசிங் பகதூரின் சிலை | |
பிறப்பு | லட்சுமனன் தேவ் 27 அக்டோபர் 1670 ரஜௌரி, ஜம்மு |
இறப்பு | 9 சூன் 1716 தில்லி, முகலாயப் பேரரசு |
தேசியம் | சீக்கியம் |
மற்ற பெயர்கள் | குர்பக்ஷ் சிங் |
செயற்பாட்டுக் காலம் | 1708-1716 |
அறியப்படுவது |
|
பின்வந்தவர் | சஜ்ஜா சிங் தில்லான் |
பிள்ளைகள் | 1 (அஜய் சிங்) 2 (ரஞ்சித் சிங்) |
பந்தா சிங் பகதூர் அல்லது பண்டா பகதூர் (Banda Singh Bahadur)[2][3][4] தில்லியின் சீக்கிய கால்சா இராணுவத்தின் தலைவராக 27 அக்டோபர் 1670 – 9 சூன் 1716 முடிய பணியாற்றியவர்.
பண்டா சிங் பகதூர் 15 வயதில் துறவறம் மேற்கொண்டு மாதோ தாஸ் எனும் பெயரில் மகாராட்டிர மாநிலம் கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள நாந்தேட்டில் ஒரு மடத்தை நிறுவினார். செப்டம்பர் 1708-இல் இவரது மடத்திற்கு வருகை புரிந்த குரு கோவிந்த் சிங்கின் சீடராகி சீக்கிய சமயம் தழுவினார். கோவிந்த் சிங் இவரது பெயரை பண்டா சிங் பகதூர் என புதிய பெயர் சூட்டி வாழ்த்து கூறினார்.
குரு கோவிந்த் சிங் அறிவுரைப் படி, ஆயுதம் தாங்கிய சீக்கிய கால்சா இராணுவத்தின் படைத்தலைவரான பண்டா பகதூர் சிங் முதலில் முகலாயப் பேரரசின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான சமானா நகரை நவம்பர் 1709-இல் தாக்கி கைப்பற்றினார்.[3] பஞ்சாப் பகுதியில் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்ட பண்டா பகதூர் சிங், பஞ்சாபில் ஜமீந்தாரி நிலவுடமை முறையை நீக்கினார். வேளாண் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமை என அறிவித்தார்.
7 டிசம்பர் 1715-இல் குர்தாஸ் நங்கல் கோட்டையில் இருந்த பண்டா பகதூர் சிங்கையும் 780 சீக்கிய வீரர்களையும் முகலாயப் படைகள் கைது செய்தனர். பண்டா பகதூர் சிங்கை இரும்புக் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்து தில்லி கொண்டு செல்லப்பட்டார்.[5] தில்லியில் வைத்து பண்டா பகதூர் சிங்கையும், அவருடன் இருந்த சீக்கிய வீரர்களையும் முகலாயப் படைகள் சித்ரவதை செய்தனர்.[6][7][8] பண்டா சிங் பகதூரையும், அவருடன் இருந்த சீக்கியப் போர்வீரர்களையும் செங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இசுலாமிய சமயத்திற்கு மாற கட்டாயப் படுத்தப்பட்டனர்.[8] முகலாயப் பேரரசின் இக்கோரிக்கையை ஏற்காத பண்டா பகதூர் சிங்கையும், அவருடன் இருந்த 700 சீக்கிய வீரர்களையும் சித்திரவதை செய்து, தலைகளை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்.[6][9][10]