பன்மொழிப் புலமை
From Wikipedia, the free encyclopedia
பன்மொழிப் புலமை (அ) பன்மொழியாமை (multilingualism) என்பது பல பல மொழிகளைப் ஒருவரோ அல்லது ஒரு சமூகமோ பயன்படுத்துவது மற்றும் பன்மொழிப்பயன்பாடை ஊக்குவிப்பதுமாகும். உலகமெங்கும் வாழும் மனிதர்களில் பலமொழிகளில் பேசக்கூடியவர்கள் ஒரேயொரு மொழியைப் பேசுபவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளார்கள்[1]. உலகமயமாக்கல், பண்பாட்டு வெளிப்படைத்தன்மை போன்ற காரணிகளால் பன்மொழிப் புலமையானது ஒரு சமூக தேவையாக, நிகழ்வாக உள்ளது[2]. இணையதளம் மூலமாக மிக எளிதாகச் செய்திகளைப் பெற்றுக்கொள்ள முடிவதும், ஒருவர் பல மொழி பேசுபவர்களுடனானத் தொடர்புகள் கொள்வது அதிகமாக நிகழ்வதாலும் பல மொழிகளைத் தெரிந்து கொள்வது எளிதில் ஏதுவாகிறது. பல மொழிகளைப் பேசுபவர்கள் பன்மொழியாளர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்[3].