பாகிஸ்தான் இயக்கம்
From Wikipedia, the free encyclopedia
பாக்கித்தான் இயக்கம் (Pakistan Movement) 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஒரு இனமத அரசியல் இயக்கமாக இருந்தது. இது பிரித்தானிய இந்தியாவில் முசுலிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் இருந்து பாக்கித்தானை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. அந்த நேரத்தில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் முசுலிம்களுக்கு தந்தீர்மானிப்பு உரிமைக்காக உணரப்பட்ட தேவையுடன் இது இணைக்கப்பட்டது. 23 மார்ச் 1940 அன்று அகில இந்திய முசுலீம் லீக்கால் இலாகூர் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஒரு வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான முகம்மது அலி ஜின்னா இந்த இயக்கத்தை வழிநடத்தினார் மற்றும் ஒரு மத அறிஞராக அசுரஃப் அலி தன்வி அதை ஆதரித்தார்.[1] தான்வியின் சீடர்களான சபீர் அகஹ்மது உசுமானி, ஜாபர் அஹ்மத் உஸ்மானி ஆகியோர் பாகித்தானின் உருவாக்கத்திற்கு மத ஆதரவில் முக்கிய பங்கு வகித்தனர்.[2]
பாக்கித்தான் இயக்கம் என்பது ஒரு மத அரசியல் இயக்கமாகும். இந்த இயக்கம் 1940 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியப் பேரரசிலிருந்து இசுலாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியைத் தனி நாடாக்கியது.