பிரிக்ஸ் திட்டம்
மலாயா அவசரகாலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டம். / From Wikipedia, the free encyclopedia
பிரிக்ஸ் திட்டம், (மலாய்: Rancangan Briggs; ஆங்கிலம்: Briggs Plan) என்பது பிரித்தானிய மலாயாவில்; மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது; மலாயா தேசிய விடுதலை படையினரின் (Malayan National Liberation Army) அச்சுறுத்தல்களைச் சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும்.
மலாயா தேசிய விடுதலை படையினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருள் உதவிகளைத் துண்டிப்பது; மலாயாக் கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிப்பது; இவையே பிரிக்ஸ் திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.[1]