பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான அரச சங்கம்
From Wikipedia, the free encyclopedia
பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான இராயல் நிறுவனம் (Royal Institute of British Architects) என்பது கட்டிடக்கலைஞர்களுக்காக ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்பட்ட ஒரு உயர்தொழில் முறை நிறுவனம் ஆகும். தொடக்கத்தில் பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்ட நிறுவனம் பின்னர் அனைத்துலக கட்டிடக் கலைஞர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. கட்டிடக் கலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்நிறுவனத்திற்கு 1837 ஆம் ஆண்டு எழுத்துப்பூர்வமான அதிகாரப் பத்திரம் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. 1971 இல் இந்நிறுவனத்திற்கு துணை அதிகாரமும் வழங்கப்பட்டது.