பெற்றோனாசு கோபுரங்கள்
From Wikipedia, the free encyclopedia
பெட்ரோனாஸ் கோபுரங்கள் அல்லது பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் (ஆங்கிலம்: Petronas Towers; மலாய்: Menara Petronas; சீனம்: 大马国油双峰塔) என்பது மலேசியா, கோலாலம்பூரில் அமையப் பெற்றுள்ள உலகிலேயே ஐந்தாவது மிக உயரமான கட்டிடங்களாகும். 20-ஆம் நூற்றாண்டின் மிக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இந்தக் கட்டிடம் ஆகும்.
பெட்ரோனாஸ் கோபுரங்கள் Petronas Towers | |
---|---|
Menara Petronas | |
முந்திய பெயர்கள் | KLCC இரட்டை கோபுரங்கள், பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள் |
பதிவு உயரம் | |
Tallest in the world from 1998 to 2004[I] | |
முந்தியது | சியேர்ஸ் கோபுரம் |
பிந்தையது | தாய்ப்பே 101 |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | Completed |
வகை | வணிக அலுவலகங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் |
கட்டிடக்கலை பாணி | பின்நவீனத்துவ கட்டிடக்கலை; இஸ்லாமிய கட்டிடக்கலை |
இடம் | ஜாலான் அம்பாங், கோலாலம்பூர், மலேசியா |
அடிக்கல் நாட்டுதல் | 1 சனவரி 1992 (1 சனவரி 1992) |
கட்டுமான ஆரம்பம் | 1 மார்ச் 1993 (1 மார்ச் 1993) |
நிறைவுற்றது | 1 மார்ச் 1998 (1 மார்ச் 1998) |
திறக்கப்பட்டது | 31 ஆகஸ்டு1999 (31 ஆகஸ்டு1999) |
துவக்கம் | 31 ஆகஸ்டு 1999 (31 ஆகஸ்டு 1999) |
புதுப்பித்தல் | 15 செப்டெம்பர் 2011 (15 செப்டெம்பர் 2011) |
செலவு | ஐஅ$1.6 billion[1] |
உயரம் | |
கட்டிடக்கலை | 451.9 m (1,483 அடி)[2] |
முனை | 451.9 m (1,483 அடி) |
அலைக்கம்ப கோபுரம் | 73 m (240 அடி) |
கூரை | 378.9 m (1,243 அடி) |
மேல் தளம் | 375 m (1,230 அடி)[2] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 88 (with 5 being underground)[2] |
தளப்பரப்பு | 395,000 m2 (4,252,000 sq ft) |
உயர்த்திகள் | 38 (ஒவ்வொரு கோபுரம்) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | சீசர் பெலி[2] |
மேம்பாட்டாளர் | கே.எல்.சி.சி நிறுவனம் KLCC Holdings Sdn Bhd |
அமைப்புப் பொறியாளர் | தோர்ந்தன் தோமாசெத்திrsekutu[2] |
முதன்மை ஒப்பந்தகாரர் | கோபுரம் 1. அசாமா கார்ப்பரேசன் கோபுரம் 2. சாம்சுங் இஞ்ஜினியரிங் / குக்டோங் இஞ்ஜினியரிங் நகர வளாகம்: B.L. Harbert International |
வலைதளம் | |
www | |
மேற்கோள்கள் | |
[2][3][4][5][6] |
2003 அக்டோபர் 17-ஆம் தேதி தாய்ப்பே 101 வானளாவிக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, பெட்ரோனாஸ் கோபுரங்கள்தான் உலகின் உயரமான கட்டிடங்களாக இருந்து வந்தன. எனினும், உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இன்னமும் இருந்து வருகின்றன. கோலாலம்பூர் மாநகரின் அடையாளச் சின்னமாகவும் இருந்து வருகிறது.
சீசர் பெலி என்னும் கட்டிடக் கலைஞரால் 1998-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும், அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துருப் பிடிக்காத உருக்குகளையும், கண்ணாடிகளையும் பயன்படுத்தி இந்த 88 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டு இருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன. மலேசியாவின் முஸ்லிம் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும், இஸ்லாமியக் கலையில் காணப்படும் வடிவ அமைப்பைக் கொண்டதாகவும் இந்தக் கட்டிடம் அமைந்து உள்ளது.