மாக்ஸ் முல்லர்
From Wikipedia, the free encyclopedia
மாக்ஸ் முல்லர் (டிசம்பர் 6, 1823 - அக்டோபர் 28, 1900), என்று பரவலாக அறியப்பட்ட பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர் (Friedrich Max Müller) ஒரு ஜெர்மானிய மொழியியலாளரும், கீழைத்தேச ஆய்வாளரும் ஆவார். இந்தியவியலைத் தொடக்கி வைத்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் இவர், சமய ஒப்பாய்வுத் துறையை உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார். இத் துறையில் இவர், ஆய்வு நூல்களையும், சாதாரண பொதுமக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளார். இவருடைய மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட, கிழக்கத்தியப் புனித நூல்கள் (Sacred Books of the East)[1] என்னும் பெயர்கொண்ட 50 தொகுதிகள் அடங்கிய பெரிய நூல் விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சிகளுக்குச் சான்றான ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் திகழ்கிறது.
விரைவான உண்மைகள் மாக்ஸ் முல்லர், பிறப்பு ...
மாக்ஸ் முல்லர் | |
---|---|
பிறப்பு | 6 திசம்பர் 1823 Dessau, Dessau-Roßlau |
இறப்பு | 28 அக்டோபர் 1900 (அகவை 76) ஆக்சுபோர்டு |
படித்த இடங்கள் |
|
பணி | நூலகர், பல்கலைக்கழகப் பேராசிரியர், எழுத்தாளர், philologist, religious studies scholar, orientalist |
வாழ்க்கைத் துணை/கள் | Georgina Adelaide Grenfell, Georgina Adelaide Grenfell |
குழந்தைகள் | Beatrice Stanley Muller, Mary Emily Müller, William G. Max Muller |
விருதுகள் | Honorary Fellow of the Royal Society Te Apārangi |
கையெழுத்து | |
மூடு