முத்தையா முரளிதரன்
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் / From Wikipedia, the free encyclopedia
முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2002 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் எனக் குறிப்பிடுகிறது.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முத்தையா முரளிதரன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | முரளி தரன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை-மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை ஓஃப் சுழற்பந்து வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 54) | ஆகஸ்ட் 28 1992 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | ஜூலை 12 2010 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 70) | ஆகஸ்ட் 12 1993 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | ஏப்ரல் 2 2011 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 08 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1991–- | தமிழ்ச் சங்கம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1999–2007 | லங்காசயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2003 | கெண்ட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 7 February 2011 |
தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.[1] சூலை 22, 2010 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும், தேர்வுத் துடுப்பாட்டத்திலும் அதிக இலக்குகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் துடுப்பாட்ட காட்சியகத்தில் இடம்பிடித்த ஒரே இலங்கைத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[2] தெரன தொலைக்காட்சி வழங்கும் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த இலங்கை வீரர் விருதினைப் பெற்றார்.[3]
பெப்ரவரி 5, 2009 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய போது கவுதம் கம்பீரை வீழ்த்திய போது பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரான வசீம் அக்ரமின் சாதனையான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 502 இலக்குகள் எனும் சாதனையை முரளிதரன் முறியடித்தார்.[4] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகளைப் பெற்ற ஷேன் வோர்ன் சாதனையை டிசம்பர் 3, ,2007 ஆம் ஆண்டில் முறியடித்தார்.[5][6]
சராசரியாக ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆறு இலக்குகளைப் பெற்றுள்ளார். தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்[7].இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரப்பட்டியலில் தேர்வுத் துடுப்பாட்டத்தின் சிறந்த பந்துவீச்சாளராக 1,711 நாட்கள் முதல் இடத்தில் நீடித்தார்.[8]
இவரின் துடுப்பாட்டக் காலங்களில் பல சர்ச்சையான நிகழ்வுகள் நடந்துள்ளன. இவரின் அதிநீட்டம் பந்து வீசும் முறையானது நடுவர்களாலும் (துடுப்பாட்டம்) துடுப்பாட்ட வாரியங்களினாலும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டன.[9] பின் பலபரிசோதனைகளுக்குப் பிறகு 1996 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவரின் பந்து வீச்சு முறை சரியாக உள்ளதாகத் தெரிவித்து விளையாட அனுமதித்தது.[7]
பெப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துடுப்பாட்ட வடிவங்களையும் சேர்த்து அதிக இலக்குகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது தனது ஓய்வினைப் பற்றி அறிவித்தார். அப்போது தான் மனதளவிலும் , உடல் அளவிலும் தகுதியுடன் இருப்பதாகவும், துடுப்பாட்டப் போட்டிகளை மகிழ்ச்சியுடன் விளையாடியதாகவும் இன்னும் விளையாடவேண்டும் போல இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனாலும் இந்த உலகக் கோப்பைப் போட்டியின் போதே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருந்து தான் ஓய்வு பெற விரும்புவதாகத் தெரிவித்தார்.[10] சூலை 18, 2010 ஆம் ஆண்டில் காலியில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியின் இறுதி நாளில் தனது ஓய்வினை அறிவித்தார்.[11] அந்தப் போட்டியின் போது 8 இலக்குகளை வீழ்த்தினார். பிரக்யான் ஓஜாவினை வீழ்த்திய பிறகு தேர்வுத் துடுப்பாட்டத்தில் 800 இலக்குகளை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.[12][13]
2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்.[14].
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 ஆம் ஆண்டில் இந்தியரான மதிமலர் இராமானுதியைத் திருமணம் செய்து கொண்டார்[15].