மெகபூப் கான்
இந்தியத் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
மெகபூப் கான் (Mehboob Khan; பிறப்பு மெகபூப் கான் ரம்ஜான் கான் ; 9 செப்டம்பர் 1907 [1] - 28 மே 1964) இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி தயாரிப்பாளர்-இயக்குனர் ஆவார். சமூக காவியமான மதர் இந்தியா (1957) என்ற படத்தை இயக்கியதற்காக மிகவும் பிரபலமானவர். இது சிறந்த திரைப்படம்,சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பிலிம்பேர் விருதுகளை வென்றது. இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். [2] இவர் 1954 இல் தனது தயாரிப்பு நிறுவனமான மெஹ்பூப் புரொடக்ஷன்ஸ் என்பதையும் பின்னர் மெஹ்பூப் ஸ்டுடியோஸ், என்ற திரைப்பட படபிடிப்பு அரங்கத்தையும் மும்பையின் பாந்த்ராவில் நிறுவினார்.[3] இவர் அவுரத் (1940) மற்றும் மதர் இந்தியா, [4] ஆகியவற்றுடன் டகோயிட் திரைப்பட வகையை உருவாக்கினார். மேலும் காதல் நாடகமான அந்தாஸ் (1949), ஆன் (1952) , அமர் (1954) உட்பட பிற வெற்றி படங்களுக்காகவும் அறியப்படுகிறார். 1963ல் இந்திய அரசால் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
மெகபூப் கான் | |
---|---|
1940களின் ஆரம்பத்தில் மெகபூப் கான் | |
பிறப்பு | மெக்பூப் கான் (1907-09-09)9 செப்டம்பர் 1907 பில்மோரா, பரோடா அரசு, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 28 மே 1964(1964-05-28) (அகவை 56) மும்பை, இந்தியா |
கல்லறை | படக்பர்ஸ்தான், மரைன் லைன்ஸ், மும்பை |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1931–1962 |
வாழ்க்கைத் துணை | பாத்திமா (பிரிந்தனர்) சர்தார் அக்தர் |
பிள்ளைகள் | 4; ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார் |