மேற்கு சியா
வடமேற்கு சீனாவின் முந்தைய பேரரசு (1038-1227) / From Wikipedia, the free encyclopedia
மேற்கு சியா அல்லது சி சியா (சீனம்: 西夏; பின்யின்: Xī Xià; வேட்-கில்சு: Hsi1 Hsia4) அல்லது தாங்குடு பேரரசு (மங்கோலியர்களுக்கு) அல்லது மி-ன்யக் (தாங்குடு மக்கள் மற்றும் திபெத்தியர்களுக்கு)[6] அல்லது அலுவல் ரீதியாக மகா சியா (சீனம்: 大夏; பின்யின்: Dà Xià) என்பது தாங்குடு மக்களால் ஆளப்பட்ட சீனாவின் பௌத்த ஏகாதிபத்திய அரசமரபு ஆகும். இது 1038 முதல் 1227 வரை நீடித்த ஒரு பேரரசு ஆகும். இது தன் உச்சபட்ச பரப்பளவின் போது, வடமேற்கு சீன மாகாணங்களான நின்ஷியா, கான்சு, கிழக்கு கிங்ஹாய், வடக்கு சென்சி, வடகிழக்கு சிஞ்சியாங், மற்றும் தென்மேற்கு உள் மங்கோலியா, மற்றும் தெற்குக் கோடி வெளி மங்கோலியா, ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. இதன் பரப்பளவு சுமார் 8 இலட்சம் சதுர கி.மீ. ஆகும்.[7][8][9]
மகா சியா | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1038–1227 | |||||||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||||||
தலைநகரம் | சிங்சிங் (நவீன இன்சுவான்) | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | தாங்குடு மொழி, சீனம் | ||||||||||||||||||
சமயம் | முதன்மை: பௌத்தம் இரண்டாம்: தாவோயியம் கன்பூசியம் சீன நாட்டுப்புற மதம் | ||||||||||||||||||
அரசாங்கம் | முடியரசு | ||||||||||||||||||
பேரரசர் | |||||||||||||||||||
• 1038–1048 | பேரரசர் ஜிங்சோங் (நிறுவியவர்) | ||||||||||||||||||
• 1139–1193 | பேரரசர் ரென்சோங் (நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர்) | ||||||||||||||||||
• 1226–1227 | லி சியான் (கடைசி) | ||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய-பாரம்பரிய வரலாறு | ||||||||||||||||||
• சொங் அரசமரபை லி ஜிசியன் எதிர்க்கிறார் | 984 | ||||||||||||||||||
• பேரரசர் ஜிங்சோங் அரசமரபைத் தோற்றுவிக்கிறார் | 1038 | ||||||||||||||||||
• மங்கோலியப் பேரரசால் அடிபணிய வைக்கப்பட்டது | 1210 | ||||||||||||||||||
• கலகத்திற்குப் பின் மங்கோலியப் பேரரசால் அழிக்கப்பட்டது | 1227 | ||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||
1100ஆம் ஆண்டு மதிப்பீடு[1] | 1,000,000 km2 (390,000 sq mi) | ||||||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||||||
• அதிகபட்சம் | 30,00,000[2][3][4] | ||||||||||||||||||
நாணயம் | நகரங்களில் சில செப்புக் காசுகளுடன் கூடிய பண்டமாற்று[5] | ||||||||||||||||||
| |||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | சீனா மங்கோலியா |
மேற்கு சியாவின் தலைநகரமானது சிங்சிங் (நவீன இன்சுவான்) ஆகும். முக்கிய சியா நகரமும், தொல்லியல் தளமுமானது காரா-கோடோ ஆகும். 1227இல் மங்கோலியர்களால் மேற்கு சியா நிர்மூலமாக்கப்பட்டது. இதன் பெரும்பாலான எழுதப்பட்ட பதிவுகளும், கட்டடக்கலையும் அழிக்கப்பட்டது. எனவே, இப்பேரரசை நிறுவியவர்களும், இதன் வரலாறும் சீனா மற்றும் மேற்குலகத்தில் 20ஆம் நூற்றாண்டு ஆய்வுகளால் கண்டறியப்படும் வரை வெளியில் தெரியாமல் இருந்தது. தற்போது தாங்குடு மொழியும், அதன் தனித்துவமான எழுத்து முறையும் அற்று விட்டன. தாங்குடு இலக்கியத்தில் சிறிதளவே எஞ்சியுள்ளது.
பட்டுப் பாதையின் ஒரு பகுதியான ஹெக்ஷி குறு வழியைச் சுற்றி இருந்த பகுதிகளை மேற்கு சியா கொண்டிருந்தது. வட சீனா மற்றும் நடு ஆசியாவுக்கும் இடையிலான மிக முக்கியமான வணிக வழி இதுவாகும். இவர்கள் இலக்கியம், கலை, இசை மற்றும் கட்டடக்கலையில் முக்கியமான சாதனைகளைப் புரிந்திருந்தனர். இச்சாதனைகள் பற்றி "ஒளிர்கிறது, பிரகாசிக்கிறது" என்று கூறப்பட்டது.[10] லியாவோ, சாங் மற்றும் சின் ஆகிய பிற பேரரசுகளுக்கு மத்தியில் இவர்களது விரிவான நிலைப்பாடானது இவர்களது திறமையான இராணுவ அமைப்புகளால் சாத்தியமானது. இந்த அமைப்பானது குதிரைப்படை, தேர்கள், வில்லாளர்கள், கேடயங்கள், சேணேவி (பீரங்கிகளை ஒட்டகங்களின் முதுகில் ஏற்றிக் கொண்டு சென்று இவர்கள் சண்டையிட்டனர்) மற்றும், நிலம் மற்றும் நீரில் சண்டையிடும் நிலநீர்த் துருப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.[11]