வனவிலங்கை வேட்டையாடுதல்
காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடுதல் மற்றும் பிடிப்பது / From Wikipedia, the free encyclopedia
வேட்டையாடுதல் (Poaching) என்பது சட்டவிரோத வேட்டையாடல் அல்லது காட்டு விலங்குகளை பிடிப்பதாகும். பொதுவாக இது நில பயன்பாட்டு உரிமைகளுடன் தொடர்புடையது.[1][2]ஒரு காலத்தில் வறிய விவசாயிகளால் வாழ்வாதார நோக்கங்களுக்காகவும், குறைந்த உணவுப் பொருட்களுக்காகவும் வேட்டையாடப்பட்டது.[3] இது பிரபுக்கள் மற்றும் பிராந்திய ஆட்சியாளர்களின் வேட்டையாடும் சலுகைகளுக்கு எதிராக அமைக்கப்பட்டது.[4]
1980களிலிருந்து, "வேட்டையாடுதல்" என்ற சொல் காட்டு தாவரங்களை சட்டவிரோதமாக அறுவடை செய்வதைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. [5] [6] விவசாய அடிப்படையில், 'வேட்டையாடுதல்' என்ற சொல், கால்நடைகளின் கால்களால் மண் இழப்பிற்கு அல்லது புல் சேதம் விளைவிக்கும் செயல்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இச்செயல் உற்பத்தி நிலம் கிடைப்பது, தண்ணீர் மாசு அதிகரிப்பு மற்றும் கால்நடைகளின் நலன் சார்ந்த பிரச்சனைகள் ஆகியவற்றை பாதிக்கலாம். கால்நடைகளைத் திருடுவது, பகை நாட்டினரின் பசுக்கூட்டங்களை திருடுவது போன்றவை திருட்டு என்று வகைப்படுத்துகிறது. இது வேட்டையாடுதல் என்று வகைப்படுத்தப் படுவதில்லை.[7]
ஐக்கிய நாடுகளின் “நிலையான வளர்ச்சி இலக்கு 15” என்ற திட்டம் அனைத்து வனவிலங்குகளின் நிலையான பயன்பாட்டை உள்ளடக்கியது. பாதுகாக்கப்பட்ட வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வேட்டையாடுதல் மற்றும் கடத்தல் ஆகியவற்றைக் கையாள்வதில் நடவடிக்கை எடுப்பதை இலக்காகக் கொண்டு அவை தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கிடைப்பதை உறுதி செய்கிறது. [8]