விசுவாசராவ்
From Wikipedia, the free encyclopedia
சிறீமந்த் விசுவாசராவ் பேஷ்வா (Shrimant Vishwasrao Peshwa) (22 சூலை 1742 - 14 சனவரி 1761) மராட்டியப் பேரரசின் புனேவைச் சேர்ந்த பேஷ்வா, பாலாஜி பாஜி ராவ் பட்டின் மூத்த மகனாவார். மேலும் மராட்டியப் பேரரசின் பேஷ்வா என்ற பட்டத்தின் வாரிசு ஆவார். இவர் தனது சிறு வயதிலிருந்தே நிர்வாகம் மற்றும் போரில் பயிற்சி பெற்றிருந்தார். 1760 இல் நடந்த சிந்த்கேடா மற்றும் உத்கீர் போரில் பங்கேற்றதன் மூலம் மராட்டிய காலாட்படையிடம் இவரது வீரம் பேசப்பட்டது. [1]
விரைவான உண்மைகள் சிறீமந்த்விசுவாச ராவ்பேஷ்வா, ஆட்சியாளர் ...
சிறீமந்த் விசுவாச ராவ் | |
---|---|
சிறீமந்த் விசுவாசராவ் (பல்லால்) பேஷ்வாவின் படம். இந்த உருவப்படம் இந்தியாவின் புனேவின் பார்வதியிலுள்ள பேஷ்வா நினைவிடத்தின் ஒரு பகுதியாகும் | |
மராட்டியப் பேரரசின் பேஷ்வா | |
பதவியில் 22 சூலை 1742 – 14 சனவரி 1761 | |
ஆட்சியாளர் | பாலாஜி பாஜி ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1742-07-22)22 சூலை 1742 சனிவார்வாடா, புனே, மராட்டியப் பேரரசு |
இறப்பு | 14 சனவரி 1761(1761-01-14) (அகவை 19) பானிப்பத், முகலாயப் பேரரசு. |
துணைவர் | இலட்சுமி பாய் (துர்காபாய் தீக்சித்-பட்வர்த்தன்) |
உறவுகள் | மாதவராவ் (சகோதரர்) பேஷ்வா நாராயணராவ் (சகோதரர்) சதாசிவராவ் பாவ் (மாமா) இரகுநாதராவ் (மாமா) சம்ஷேர் பகதூர் (மாமா) பாஜிராவ்(Grandfather) காஷிபாய்(Grandmother) |
பெற்றோர் | பாலாஜி பாஜி ராவ் (தந்தை) கோபிகாபாய் (தாயார்) |
Military service | |
பற்றிணைப்பு | மராட்டியப் பேரரசு |
போர்கள்/யுத்தங்கள் | மூன்றாம் பானிபட் போர் |
மூடு
மூன்றாம் பானிபட் போரில், பஷ்தூன் அதிகாரி ஒருவர் சுட்ட துப்பாக்கியால் இவர் தலையில் தாக்கப்பட்டு [2] இறந்தார். கிராண்ட் டஃப் என்பாரது என்பாரது கருத்துப்படி, இவரது மரணம் குறித்து கேள்விப்பட்ட மல்கர் ராவ் ஓல்கர் குறைந்தது 10,000 வீரர்களுடன் களத்தில் இருந்து பின்வாங்கினார் எனத் தெரிகிறது.