விலங்குகளிடம் உணர்வு
From Wikipedia, the free encyclopedia
விலங்குகளிடம் உணர்ச்சி (Emotion in animals) என்பது மனிதன் அற்ற வேறு விலங்குகளிடம் காணப்படும் அல்லது விலங்குகளினால் உணரப்படும் உள உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் குறிப்பதாகும். அவ்வுணர்ச்சிகள் உளவியல் முறையில் வெளிப்பாடுகளாகவும், உயிரியல் எதிர்வினைகளாகவும் உணர்ச்சிநிலைகளாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.
விலங்குகளில் காணப்படும் உணர்வுகளின் இயற்கைத் தன்மையைப்பற்றியும் இருப்பைப்பற்றியும் முதன்முதல் எழுதிய விஞ்ஞானி சார்ள்ஸ் டார்வின் ஆவார்.[1]
விலங்குகளின் துக்கம் என்பது நமக்கு பிடித்தமான ஒன்றினை இழக்கும் போது ஏற்படும் துன்பமான உணர்ச்சிநிலை ஆகும். இந்த உணர்ச்சி மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிலும் காணப்படுகிறது.உணர்ச்சிகளின் படிமலர்ச்சி குறித்த ஆய்வு 19 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகும். டார்வின் மாந்த தொடர்பாடலைப் புரிந்துகொள்ல படிமலர்ச்சியையும் இயற்கைத் தேர்வையும் பயன்படுத்தினார். இவரது 1872 ஆண்டு நூலாகிய, விலங்கிலும் மாந்தனிலும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு விலங்கின் உணர்ச்சிகளைப் பற்றி விவரித்துள்ளது.[2] டார்வின் உஆர்ச்சி வெளிப்பாட்டை ஆய்வு செய்து, மாந்த படிமலர்ச்சி வாயிலாக புறத்தோற்றவகைகளை விலங்கில் இருந்து பெற்றது போலவே படிமலர்ச்சிவழியாக உணர்ச்சிகளையும் விலங்கு வழியாகவே பெற்ருத் தகவமைத்துக் கொண்டான் என்றார்.[3] இவர் உணர்ச்சிகளை முக வெளிப்பாடு மட்டத்தில் மட்டுமன்றி விலங்கு மாந்த நடத்தைகளி இணைநிலைகள் துலங்குவதை ஆய்ந்தார்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிம்பன்சீஸின் துயரத்தை பற்றியும், விலங்கு மற்றும் மனித துயரத்திற்கும் இடையேயான தொடர்பை பற்றியுமான ஆராய்ச்சி தொடங்கியது. எனினும், விலங்குகளின் வருத்தங்களைப்பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் வருவதில்லை.மார்க் பெக்காஃப் என்ற விஞ்ஞானி, ஓநாய்கள், சிம்பான்சிகள், மாக் போர்கள், யானைகள், டால்பின்கள், ஒட்டர்ஸ், வாத்துகள், கடல் சிங்கங்கள் மற்றும் இன்னும் பல விலங்குகளில் துன்பம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளை ஆராய்ச்சி செய்தார்.