ஹோரஷியோ நெல்சன்
From Wikipedia, the free encyclopedia
ஓரேசியோ நெல்சன் (Horatio Nelson, செப்டம்பர் 29, 1758 -அக்டோபர் 21, 1805) ஐக்கிய இராச்சிய கடற்படையின் புகழ்பெற்ற தளபதி (அட்மிரல்)களில் ஒருவராவார். பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் பொனபார்ட் இங்கிலாந்து மீது தொடுத்த போர்களில் பிரெஞ்சுக் கடற்படையை தோற்கடித்தவர். மிகவும் வீரமிக்க போர்வீரராகவும் போர் தந்திரங்களில் வல்லவராகவும் அறியப்படுகிறார். சண்டைகளின்போது நெல்சன் ஒரு கண்ணையும் கையையும் இழந்தவர்.[1]
ஹோரஷியோ நெல்சன் Horatio Nelson | |
---|---|
பிறப்பு | 29 செப்டெம்பர் 1758 |
இறப்பு | 21 அக்டோபர் 1805 (அகவை 47) |
கல்லறை | புனித பவுல் பேராலயம் |
படித்த இடங்கள் |
|
பணி | அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை/கள் | Frances Herbert Woolward |
குழந்தைகள் | Horatia Nelson |
குடும்பம் | Susannah Nelson, William Nelson, 1st Earl Nelson, Suckling Nelson, Maurice Nelson |
விருதுகள் | Knight Grand Cross of the Order of Saint Ferdinand and of Merit, Chelengk |
கையெழுத்து | |
நெல்சன் நோர்போக்கில் உள்ள பர்னம் தோர்ப்பு என்றவிடத்தில் பிறந்தார். பிரெஞ்சு மற்றும் இசுப்பானியா|இசுப்பானியக் கடற்படைகளை தோற்கடித்தவர். டிரபால்கர் சண்டையில் எதிரிகளைத் தோற்கடித்தபோதும் ஒரு பிரெஞ்சு வீரரின் துப்பாக்கிக்கு இரையானார். இவரது நினைவைப் போற்றும் வண்ணம் இலண்டனின் மையப்பகுதியான டிரபால்கர் சதுக்கத்தில் ஒரு நினைவுத்தூண், நெல்சன் தூண் எழுப்பப்பட்டுள்ளது.