1938 உலகக்கோப்பை காற்பந்து
From Wikipedia, the free encyclopedia
1938 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1938 பிஃபா உலகக்கோப்பை (1938 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் மூன்றாவது பதிப்பாகும். இப்போட்டிகள் பிரான்சில் 1938 சூன் 4 முதல் சூன் 19 வரை நடைபெற்றன. இறுதிப் போட்டியில் அங்கேரியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இத்தாலி தனது பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இத்தாலியின் 1934 மற்றும் 1938 அணிகள் ஒரே பயிற்சியாளரான விட்டோரியோ போசோவின் கீழ் பலமுறை உலகக் கோப்பையை வென்ற ஒரே ஆண்கள் தேசிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளன. இரண்டாம் உலகப் போரின் இடையூறு காரணமாக 1950 வரை இது கடைசி உலகக் கோப்பையாக இருந்தது.[1]
விரைவான உண்மைகள் Coupe du Monde, சுற்றுப்போட்டி விவரங்கள் ...
Coupe du Monde பிரான்சு 1938 | |
---|---|
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | France |
நாட்கள் | 4–19 சூன் 1938 |
அணிகள் | 15 (4 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 10 (9 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | இத்தாலி (2-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | அங்கேரி |
மூன்றாம் இடம் | பிரேசில் |
நான்காம் இடம் | சுவீடன் |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 18 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 84 (4.67 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 3,74,835 (20,824/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | லியோனிதாசு (7 இலக்குகள்) |
← 1934 1950 → | |
மூடு