26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்
2008 மும்பை தாக்குதல்கள் / From Wikipedia, the free encyclopedia
2008 மும்பை தாக்குதல்கள் இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில், இசுலாமியத் தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புகள் ஆகும்.,[5][6][7] தாக்குதல் நடத்தியவர்கள் முன்னரே உளவு உதவிகளை பெற்றிருந்தனர். உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப், தாக்குதல்கள் பாக்கித்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடத்தப்பட்டது என்று விசாரணையின் போது ஒப்புக்கொண்டார் . தாக்குதல்கள் 2008ஆம் ஆண்டு புதன் கிழமையான, 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை, 29 வரை நீடித்தது; 164 பேர் கொல்லப்பட்டனர்; குறைந்தது 308 பேர் காயப்படுத்தப்பட்டனர்.
2008 மும்பாய் தாக்குதல்கள் | |
---|---|
2008 மும்பை தாக்குதல்கள் வரைபடம் | |
நாள் | 26 நவம்பர் 2008 – 29 நவம்பர் 2008 (இந்திய சீர் நேரம், ஒ.ச.நே + 05:30) |
தாக்குதல் வகை | குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு, பணயக்கைதிகள் நெருக்கடி[1], முற்றுகை |
இறப்பு(கள்) | சுமார் 166 (10 தீவிரவாதிகள் உட்பட) |
காயமடைந்தோர் | 308 மேல் |
தாக்கியோர் | ஹபீஸ் முகமது சயீத் தலைமையில் லஷ்கர் ஈ தொய்பா[2].[3][4] |
தாக்குதல்கள் தெற்கு மும்பையில் எட்டு இடங்களில் ஏற்பட்டது: சத்ரபதி சிவாஜி முனையம் ,தி ஓபராய் டிரைடன்ட் ஓட்டல் , தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர், லியோபோல்ட் கஃபே, காமா மருத்துவமனை (பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை), நரிமன் ஹவுஸ் யூத சமூக கூடம், மெட்ரோ சினிமா, டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டிடத்தின் பின்னாலுள்ள வழிபாதை மற்றும் சேவியர் புனித கல்லூரி. மும்பை துறைமுகம பகுதி மஜகாணிலும் வில்லே பார்லேயில் ஒரு டாக்ஸியிலும் குண்டு வெடிப்புகள் நடந்தது . 28 நவம்பர் அதிகாலை , தாஜ் ஹோட்டல் தவிர அனைத்து தளங்களையும் மும்பை போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தங்களது பாதுகாப்புக்குள் கொண்டுவந்தனர் . 29 நவம்பர், தேசிய பாதுகாப்புப் படை தாஜ் ஓட்டலில் ஆபரேஷன் பிளாக் டொர்னாடோ மூலமாக மீதமுள்ள தீவிரவாதிகளை அகற்றித் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
அஜ்மல் கசாப், தாக்குதல்கள் பாக்கித்தானைச் சார்ந்த தீவிரவாத அமைப்பாகிய லஷ்கர் இ தொய்பாவின் உறுப்பினர்களால் நடத்தப்பட்டது என்று கூறினான். இந்தியா, பாக்கிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் , மற்றும் ஐக்கிய நாடுகள் அவை இதை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றனர். இந்திய அரசாங்கம் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக அறிவித்தது .அவர்கள் பாகிஸ்தானிலிருந்தது கட்டுப்பாட்டுத்தபட்டனர் என்று தெரிவித்தது. சனவரி 7, 2009 அன்று, பாக்கிஸ்தான் தகவல் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் அதிகாரப்பூர்வமாக அஜ்மல் கசாப் பாகிஸ்தானி தான் என்று ஏற்றுக்கொண்டார். மே 6 2010 அஜ்மல் கசாபுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்தும் 21 பெப்ரவரி 2011 இல் பம்பாய் உயர் நீதிமன்றமும் மற்றும் 29 ஆகஸ்ட் 2012 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.