இந்திய தேசிய இலச்சினை
From Wikipedia, the free encyclopedia
இந்திய தேசிய இலச்சினை என்பது இந்தியக் குடியரசின் தேசியச் சின்னமாகும். இது சாரநாத்தில் அசோகர் எழுப்பிய சிங்கத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது திசம்பர் 1947 இல் இந்திய மேலாட்சி அரசின் சின்னமாகவும், பின்னர் 26 சனவரி 1950 இல் இந்தியக் குடியரசின் சின்னமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விரைவான உண்மைகள் இந்திய தேசிய இலச்சினை, விவரங்கள் ...
இந்திய தேசிய இலச்சினை | |
---|---|
விவரங்கள் | |
பயன்படுத்துவோர் | இந்தியா |
உள்வாங்கப்பட்டது | 26 சனவரி 1950 |
விருதுமுகம் | அசோகரின் தூண் |
குறிக்கோளுரை | सत्यमेव जयते (சத்தியமேவ ஜயதே): "வாய்மையே வெல்லும்" |
மூடு
இந்திய தேசிய இலச்சினை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையாக பயன்படுத்தப்படுகின்றது. அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும், கடவுச்சீட்டுகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது.