வாற்கோதுமை
From Wikipedia, the free encyclopedia
வாற்கோதுமை அல்லது பார்லி[1] (Barley, Hordeum vulgare) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இது உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும். உருசியா, கனடா போன்றவை பார்லி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும். 2007ஆம் ஆண்டு எடுத்த கணக்குப்படி உலகில் அதிகமாக பயிர்விக்கப்படும் ஐந்தாவது தானியமாக வாற்கோதுமை இருந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் இதன் பயிர்க்கொள்ளளவு பதிமூன்று கோடியே அறுபது இலட்சம் தொன்களாகும்.[2]
விரைவான உண்மைகள் வாற்கோதுமை, உயிரியல் வகைப்பாடு ...
வாற்கோதுமை | |
---|---|
பார்லி வயல் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | நிலைத்திணை |
பிரிவு: | பூக்கும் நிலைத்திணை |
வகுப்பு: | இலிலியோப்சிடா |
வரிசை: | போலெசு |
குடும்பம்: | போவோசியே |
பேரினம்: | ஓர்டியம் |
இனம்: | ஓர்டியம் வல்கரே |
இருசொற் பெயரீடு | |
ஓர்டியம் வல்கரே | |
மூடு